காமாட்சி அம்மன் கோவிலில் கனு உத்சவம் நிறைவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் கனு உத்சவம் நிறைவையொட்டி, காமாட்சியம்மன், லட்சுமி, சரஸ்வதி தேவியருக்கு காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு அபிஷேகம் செய்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கனு உத்சவம் கடந்த 10ம் தேதி துவங்கியது. உத்சவத்தையொட்டி, கனு மண்டபத்தில், காமாட்சியம்மன், லட்சுமி, சரஸ்வதி தேவியருக்கு தினமும் அபிஷேகம் நடந்தது.
கனு உத்சவம் நிறைவு நாளான நேற்று முன்தினம் காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காமாட்சியம்மன், லட்சுமி, சரஸ்வதி தேவியருக்கு 16 விதமான பழச்சாறுகள், திரவியங்கள், மூலிகைகள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்தார்.
தொடர்ந்து, ஸ்தானீகர்களால் புஷ்பாஞ்சலியும் நடத்தப்பட்டது. இளையமடாதிபதி சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடனிருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
ஹைதராபாத்தில் தமிழக பள்ளி இசைக்குழுவினருக்கு அநீதி; தமிழக அரசு மவுனம் கூடாது என்கிறார் அண்ணாமலை
-
மகளிருக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவச பஸ்: தேர்தல் வாக்குறுதி அளித்தார் இபிஎஸ்
-
ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ஈரானில் 800 பேரின் மரண தண்டனை ரத்து; அதிபர் டிரம்ப் பாராட்டு
-
எம்ஜிஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க பாடுபடுவோம்; பிரதமர் மோடி
Advertisement
Advertisement