ஊட்டி அருகே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்; 32 பேர் காயம்
ஊட்டி: ஊட்டி அருகே நடந்த மினி பஸ் விபத்தில், காயமடைந்த 32 பேருக்கு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து நேற்று மதியம் 1:20 மணிக்கு தங்காடு கிராமத்திற்கு பயணியருடன் மினி பஸ் புறப் பட்டது. தங்காடு பகுதியை சேர்ந்த டிரைவர் பன்னீர்செல்வம், 45, அந்த மினி பஸ்சை ஓட்டினார்.
இந்நிலையில், எம்.பாலாடா - மணிஹட்டி இடையே மணலாடா பகுதியில் மினி பஸ் சென்றபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பயணம் செய்த அனைவரும் காயம் அடைந்தனர்.
அப்பகுதியினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து எமரால்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (1)
m.arunachalam - kanchipuram,இந்தியா
08 ஜன,2026 - 21:27 Report Abuse
முதல் காரியமாக பஸ்சில் பாட்டு ஒலி பரப்புவதை நிறுத்த வேண்டும். பெருமை, அலட்சியம், கவன சிதறல், அனுபவ குறைவு இவை அனைத்தும் இதில் உள்ளன. 0
0
Reply
மேலும்
-
உழவர் திருநாளில் கூட உறுத்தாமல் மதுவை ஊருக்கே ஊற்றிக் கொடுத்த திமுக அரசு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி தமிழகத்திலும் உறுதி; மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை
-
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
-
எம்ஜிஆர் 109வது பிறந்த நாள்... இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
ஹைதராபாத்தில் தமிழக பள்ளி இசைக்குழுவினருக்கு அநீதி; தமிழக அரசு மவுனம் கூடாது என்கிறார் அண்ணாமலை
Advertisement
Advertisement