சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் தண்டேவாடா, சுக்மா மாவட்டங்களில் செயல்பட்டு வந்த நக்சல்களை ஒழிக்கும் பணியில், மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் நக்சலைட்டுகள் சரண் அடையும் நிகழ்வு நடந்து வருகிறது.
பிஜாப்பூரில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
நக்சலிசம் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும்...மேலும்
-
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு; மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர்
-
தமிழகத்தில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா? காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி
-
ஒராண்டில் 539 தாய்மார்கள் தாய்ப்பால் தானம்: 924 குழந்தைகள் நலம்!
-
அசாம் முன்னேற்றம் அடைவதை காங்கிரஸ் விரும்பவில்லை; பிரதமர் மோடி
-
வங்கதேசத்தில் மற்றொரு கொடூரம்; கார் ஏற்றி ஹிந்து தொழிலாளி கொலை!
-
யாரும் எந்த முட்டுக்கட்டையும் போடக் கூடாது; கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் திட்டவட்டம்