சேதமடைந்த தடுப்பு
கூடலுார்: கூடலுார் துப்புகுட்டிபேட்டை அருகே, காசிம்வயல் பகுதியில் இருந்து வரும் நீரோடை செல்ல, கோழிக்கோடு சாலை நடுவே பாலம் அமைத்துள்ளனர். பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில் உள்ள தடுப்பு முற்றிலும் சேதமடைந்தது. தற்காலிக தடுப்பாக அமைந்திருந்த சிமென்ட் தடுப்புகளும் தற்போது சேதமடைந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் சாலை சீரமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள், அப்பகுதி வேகமாக கடந்து செல்கின்றன. பாலத்தின் ஓரத்தில் பாதுகாப்பு தடுப்புகள் இல்லாததால், வாகன விபத்துகள் அபாயம் உள்ளது. மேலும், அப்பகுதி மக்கள் கடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து, பாலத்தை ஒட்டி பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது
Advertisement
Advertisement