ஹெத்தையம்மன் கோவிலில் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம்
கோத்தகிரி: கோத்தகிரி பேரகணி ஹெத்தையம்மன் கோவிலில் மத்திய இணை அமைச்சர், முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா கடந்த திங்கள்கிழமை துவங்கி, ஒரு வாரம் நடந்து வருகிறது. இந்நிலையில், கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள பேரகணி பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஹெத்தையம்மன் மடிமனையில், நேற்று விழா நடந்தது. அதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் பங்கேற்று அம்மனுக்கு உரித்தான, 'ஒட்டி ஹணா' என்ற காணிக்கை செலுத்தி, அம்மனை வழிபட்டார்.
முன்னதாக, பக்தர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில், படுக சமுதாய கலாசார உடை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது
Advertisement
Advertisement