மாடக்கோட்டை பகுதியில் நெல் அறுவடை தீவிரம்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
செங்குடி, வரவணி, மஞ்சள்பட்டினம், மாடக்கோட்டை, வண்டல், விசவனுார், அளவிடங்கான் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மகசூல் நிலையை எட்டியதை தொடர்ந்து தற்போது அறுவடை பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை தொடர்ந்து இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாவட்டத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருவதால் நெற்கதிர்களை மழைக்கு முன் அறுவடை செய்யும் விதமாக கூடுதல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அப்பகுதிகளில் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரப் படுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது
Advertisement
Advertisement