ராக்கெட் ஏவப்பட இருப்பதால் வரும் 12ல் மீன் பிடிக்க தடை

கும்மிடிப்பூண்டி: ராக்கெட் ஏவப்பட இருப்பதால், வரும் 12ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதள மையத்தில் இருந்து, வரும் 12ம் தேதி காலை 10:17 மணிக்கு, பி.எஸ்.எல்.வி., - சி62 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ் - என்1 விண்கலம் ஏவப்பட உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதள மையம் அருகே, திருவள்ளூர் மாவட்ட மீனவ கிராமங்கள் அமைந்திருப்பதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், அன்றைய தினம் மீன்பிடி தொழிலுக்கு மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் பொன் னேரி உதவி இயக்குநர் அஜய் ஆனந்த் சார்பில், அனைத்து மீனவ கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, நேற்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement