மண்டல அளவில் கபடி போட்டி மாணவியருக்கு பாராட்டு விழா
ஈரோடு: ஈரோடு மண்டல அளவிலான, பெண்களுக்கான கபடி போட்டி ஒத்தக்குதிரை வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடைபெற்றது.
ஆறு பாலிடெக்னிக் கல்லுாரிகள் கலந்து கொண்ட கபடி போட்டியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் மாணவியர் அணி முதல் இடமும், சேரன் பாலிடெக்னிக் கல்லுாரி இரண்டாம் இடமும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவியருக்கு கல்லுாரி நிர்வாகத்தின் சார்பாக பாராட்டு விழா முதல்வர் பிரகதீஸ்வரன் தலை-மையில் நடந்தது. கல்லுாரி செயலாளரும், பவானி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான கருப்பணன் சிறப்பாளராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு கோப்பை வழங்கினார்.
கல்லுாரி முதன்மை செயல் அதிகாரி கவுதம் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழாவில் பிசி-யோதெரபி கல்லுாரி முதல்வர் நந்தகுமார், கல்-லுாரி துணை முதல்வர் மணி, அனைத்து துறைத் தலைவர்கள், இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு-களை உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன் செய்-திருந்தார்.
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது