மத்திய அரசு தரும் தரவுகளே பதில்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு மத்திய அரசு தரும் தரவுகளே பதில் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உலகளாவிய திறன் மையத்தின் தலைநகராக தமிழகம் மாறி வருகிறது. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பயணத்தில் இந்த மாநாடு முக்கியமானதாக அமையும். திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த பின் தான் தகவல் தொழில்நுட்ப மாநாடு நடத்தப்படுகிறது. தொழில்நுட்பம் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தை வெறும் பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமே பார்க்காமல் சமூக வளர்ச்சிக்காகவும் பார்க்க வேண்டும். புதுயுக தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னணியில் இருக்க வேண்டும். தொழில்நுட்பம் என்பது துணை செயல்பாடாக இல்லாமல், பொருளாதார சக்கரத்தின் மைய அச்சாக மாறி இருக்கிறது.
மாற்றம்
உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப சூழல் இயல்பாகவே ஒருங்கிணைந்து இருப்பது தமிழகத்தின் சிறப்பு. தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஒரு நகரத்தில் மட்டும் சுருங்கிவிடாமல், மாநிலம் முழுவதும் சமமாக பரவுவதையும் உறுதி செய்து இருக்கிறோம். கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற நகரங்களும் தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்குதாரர் ஆக உயர்ந்து இருக்கிறது.
மென்பொருள் ஏற்றுமதி
நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுமாறு ஒரு டேட்டாவை சொல்கிறேன். தமிழகத்தில் இருக்கும் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு மத்திய அரசு தரும் தரவுகளே பதில். ஆற்றல் மிக்க மனித வளம் தான் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்தியாவிலேயே பட்டியலினத்தவர்மீது அதிகம் தாக்குதல் நடப்பது தமிழ்நாட்டில்தான் என்று மத்திய அரசின் தரவுகள் சொல்கிறதே . ....அதுவும் உண்மைதானே முதல்வரே
4.5 ஆண்டுகளாக உங்கள் அரசு மென் பொருள் ஏற்றுமதிக்காக செய்தவை என்னென்ன???? அதை பட்டியலிட்டு பேசுங்கள்.. முந்தைய ஆட்சியாளர்கள் போட்டு வைத்த அடித்தளம்தான் இதற்கு காரணம் என்றால் நீங்கள் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்துங்கள்..பொய் பேசுவது தான் உங்கள் திராவிட மாடல்..
இதெல்லாம் சொல்லி பெருமை பேசுவார் இவர். ஆனால் பொருளாதார குற்றப்பிரிவு ED என்கிற அமைப்பு ஸ்டாலின் ஆட்சியில் ஊழல்களை சொன்னால் பதறுவார் கதறுவார் புலம்புவார்.
200 ரூபா உ.பிஸ் என்று கிண்டல் செய்யும் சங்கிகள் முதல்வர் தரும் 3000 ரூபா வாங்க வேண்டாம்.
சொம்பு கைலாசம்...அது தமிழ்நாட்டு மக்கள் பணம்....அப்பன் வீட்டு பணம்.கிடையாது...வாங்குவோம்
மத்திய அரசா மத்திய அரசா மத்திய அரசா அப்டீன்னா என்னாங்கோ
இதெல்லாம் வளர்ச்சி திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரிகள் வைத்து கொண்டு செஞ்சு தான் ஆகணும் தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் கொள்கைகள் கொண்டு என்ன செய்தேர்கள் திராவிட மாடல் என்பது நீங்கள் வச்ச பேர் எல்லா ஆட்சியாளர்களும் இன்னும் நிறைய கிராமங்கள் குடிதண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதி இன்றி தவிக்கின்றனர் அதற்கு நீங்கள் என்ன பண்ணீங்க
எப்போதிலிருந்து ஒன்றியம் மத்திய அரசு ஆனது . அமித் ஷா வருகைக்கு பிறகா ?
தனக்கு தானே தினமும் புகழ்ந்து விடும் புளுகுகள் யாவும் திருப்பி இவரையே கழுவி கழுவி ஊத்திக்கொண்டிருக்கிறது. ஒரே காமெடி
இதில் இருந்தே மத்திய அரசு நியாயமான அரசு என்று சொல்லாமல் சொல்கிறார்
முதல்வர் அவர்களே தமிழ் நாட்டில் யாருமே உங்களை மதிப்பதில்லை. தயவுசெய்து இந்த உண்மையை புரிந்துகொள்ளுங்கள் .... காமராஜர், அண்ணா MGR மற்றும் ஜெயலலிதா அம்மையார் எவர்களுக்குத்தான் மரியாதையை என்றும் உள்ளது. அதுவும் இந்துக்கள் உங்களையும் உங்களை சுற்றியள்ளவர்களையு ம் யாருமே உங்களை மதிப்பதில்லை
1000 ரூபாய் என்பது அரசாங்க பணம் உங்கவீட்டு பணம் இல்லை என்று தமிழக பெண்கள் பேசிகொள்கிறாராகள் ..இதுதான் உங்க மேல உள்ள மரியாதை ......மேலும்
-
ஜனநாயகன் படத்துக்கு தொடரும் சிக்கல்; தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல் முறையீடு
-
கிரீன்லாந்தை கைப்பற்ற திட்டமா? அதிபர் டிரம்புக்கு டென்மார்க் கடும் எச்சரிக்கை
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
-
அதிமுக - பாஜ தொகுதி பங்கீடு பேச்சு: இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
-
மயிலாடுதுறை மீனவர்களுக்கு எச்சரிக்கை
-
போராடும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உறுதி