ஐநா விருது பெற்ற சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கில் காலமானார்
புனே: உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கில்,83, காலமானார்.
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்காற்றி வந்த ஆய்வாளர்களில் ஒருவர் மாதவ் காட்கில்,83. 1942ம் ஆண்டு மஹாராஷ்டிராவின் புனேவில் பிறந்த இவர், புனே பல்கலையில் உயிரியல் பட்டம் பெற்றார். அதேபோல, மும்பை பல்கலையில் கணிதத்தில் ஆய்வாளர் பட்டமும் பெற்றுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக பொறுப்பு வகித்த மாதவ் காட்கில், சிறப்புமிக்க அறிக்கையை உருவாக்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவப்படுத்தும் விதமாக, பத்மஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற மத்திய அரசின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், கடந்த 2024ம் ஆண்டு சூழலியல் ஐநாவின் உலகின் மிக உயரிய விருதான 'சாம்பியன் ஆப் தி எர்த்' விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக மாதவ் காட்கில் நேற்று (ஜனவரி 8) புனேவில் காலமானார்.
அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மாதவ் காட்கில் ஆற்றிய பங்களிப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாதது என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.
நல்லாற்று திட்டமும் நடைபெரியவில்லை. காங்கேயம் படியூரில் மேற்கு தொடர்ச்சி மலை தண்ணீர் உபரியான நேரத்தில் கொடுக்கவேண்டும் என்றார் - இப்போது அவர் இல்லை. மு பெ சாமிநாத கவுண்டர் முயற்சி செய்வார் கட்சி நினைவு இல்லாமல் விவசாய மக்களுக்காக.
ஆழந்த இரங்கல். சுற்றுச்சூழலை பாதுகாக்க இவர் அளித்த ரிப்போர்ட்டை கேரள அரசு நிராகரித்துவிட்டது. அதனால்தான் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு பல உயிர்கள் சொத்துக்கள் அழிய நேரிட்டது. நிராகரிப்புக்கான கரணம் சிறுபான்மை வாக்குவங்கிமேலும்
-
ஜனநாயகன் படத்துக்கு தொடரும் சிக்கல்; தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல் முறையீடு
-
கிரீன்லாந்தை கைப்பற்ற திட்டமா? அதிபர் டிரம்புக்கு டென்மார்க் கடும் எச்சரிக்கை
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
-
அதிமுக - பாஜ தொகுதி பங்கீடு பேச்சு: இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
-
மயிலாடுதுறை மீனவர்களுக்கு எச்சரிக்கை
-
போராடும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உறுதி