75 சதவீத சொத்துக்கள் மக்களுக்கே அர்ப்பணிப்பு: மகனை இழந்த 'வேதாந்தா' நிறுவனர் அறிவிப்பு
மும்பை: 'வேதாந்தா' குழுமத்தின் நிறுவனர் அனில் அகர்வால், மகன் அக்னிவேஷ் மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து, தான் சம்பாதித்த சொத்துகளில் 75 சதவீதத்துக்கு மேலான சொத்துக்கள் மக்களுக்கான நலப்பணிகளுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
உலகம் முழுதும் கனிமம் மற்றும் சுரங்கம் தொடர்பான தொழிலில், 'வேதாந்தா' குழுமம் ஈடுபட்டு உள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த குழுமம், தமிழகத்தின் துாத்துக்குடியில் செயல்பட்ட, 'ஸ்டெர்லைட்' ஆலையையும் நிர்வகித்து வந்தது.
இந்த நிறுவனத்தின் தலைவராக அனில் அகர்வால் உள்ளார். இவரின் மூத்த மகன் அக்னிவேஷ், 49, 'வேதாந்தா' குழுமத்தில் உள்ள, 'தல்வண்டி சபோ பவர் லிமிடெட்' என்ற நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.
அமெரிக்காவில், சமீபத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட அக்னிவேஷ், விபத்தில் சிக்கினார். இவருக்கு நியூயார்க்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக உடல்நலம் தேறி வந்த அக்னிவேஷ், திடீர் மாரடைப்பால் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இது, அனில் அகர்வாலின் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தன் மகனின் மரணம் குறித்து, சமூக வலைதளத்தில் அனில் அகர்வால் கூறியுள்ளதாவது:
இது, என் வாழ்வின் இருண்ட நாள். என் அன்பு மகன் அக்னிவேஷ், எங்களை விட்டு விரைவாக பிரிந்து விட்டார். தன் பிள்ளைக்கு விடை கொடுக்க வேண்டிய பெற்றோரின் வலியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்த இழப்பு, என்னையும், என் மனைவி மற்றும் குடும்பத்தாரை மிகவும் நொறுக்கிவிட்டது.
எங்கள் வருமானத்தில், 75 சதவீதத்தை இந்த சமூகத்துக்கு திருப்பித் தருவதாக என் மகனிடம் உறுதி அளித்திருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இன்று உறுதி எடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமூகப் பணிக்காக, தன் வருமானத்தில் 75 சதவீதத்துக்கு அதிகமாக செலவிடப்போவதாக அறிவித்துள்ள அனில் அகர்வாலின், 'வேதாந்தா' குழுமத்தின் தற்போதைய சொத்து மதிப்பு, 2.43 லட்சம் கோடி ரூபாய்.
கணக்கில் வரும் சொத்துக்கள் மட்டுமா?
வீட்டுக்குள் நடக்கும் போது மட்டுமே இழப்பின் வலியை உணர்பவன் மனிதன். அடுத்தவரின் வலிக்கும் அழுபவன் நல்ல மனிதன்.
மரணம் வலியது. எல்லோருக்கும் மரணம். நிலையில்லாத மனிதன். ஆனால் மற்ற ஜீவன்கள் போல் அல்ல மனிதன் - அவனுக்கு ஓர் வாழ்க்கை உண்டு. அதற்கு மனிதன் தகுதி ஆகவேண்டும். வேதாந்த அவர்களின் செயல் போற்றுதற்கு உரியது.
அக்னிவேஷ் மறைவுக்கு இரங்கல்கள் .தூத்துக்குடி துப்பாக்கி சுட்டதில் இரண்டு குடும்பங்களை தத்து எடுக்கலாம் .அவர்கள் சாபம் கூட இதன் காரணமாக இருக்கும் .
துப்பாக்கி சூட்டில் இறந்தது திருட்டு த்ரவிஷ மற்றும் பாவாடை பரோக்களின் சூழ்ச்சி. அன்றைய தினத்தில் அந்த நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தது இன்றைய முதல்வர். 200 ரூவா + ஓசி பிரியாணி+ குவாட்டர் இதை புரிந்து கொள்வது நல்லது
இந்தியாவிலேயே மோட்டார் உற்பத்தி விற்பனையில் கோலோச்சி வந்த கோவை மாநகரம் மோட்டார் விற்பனையில் முன்னணிலை வகிக்க காரணம் ஸ்டெரிலைட் ஆலையின் காப்பர் ஒரு காரணம். ஸ்டெரிலைட் ஆலை மூடப்பட்ட பின்னர் காப்பர் விலை நிர்ணயம் செய்யும் உரிமை சீனாவிடம் சென்று விட்டது. விலையும் உயரத்தொடங்கியது. வேறு வழியின்றி இந்தியாவும் காப்பர் இறக்குமதி சீனாவிடம் இருந்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதில் அகமதாபாத் நிறுவனங்கள் காப்பியை சீனாவிடம் இறக்குமதி செய்து மோட்டார் உற்பத்தியில் கோவையோடு போட்டி இட்டு முன்னனிக்கு சென்றனர். பத்தாத குறைக்கு சீனா குறைந்த விலையில் தரமற்ற பம்பு செட்டுகள் கிட் தயாரித்து இந்தியாவிற்கு விற்பனை செய்து கோவை மோட்டார் தொழிலில் மேலும் சிக்கல் உண்டாக்கியது. தமிழக அரசும் மக்களில் ஒரு பகுதியினர் பிரச்சினைக்கு தீர்வு காண முயலாமல் எலிக்கு பயந்து வீட்டை கொளுத்தியது போல் வேதாந்தவை மூடி விட்டனர். கோவையில் மோட்டார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த பல குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டது. ஆனால் நல்ல வேலையாக கோவை மக்கள் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்தும் மாற்று தொழில்களுக்கு சென்றும் தங்களை காத்துக் கொண்டனர். பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று அனைவருக்கும் தெரியும்.
வக்கிர புத்தி
அனில் அகர்வால் அவர்களின் மகன் அக்னிவேஷ் அகர்வால் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம். மகனின் இழப்பால் தன்னுடைய 75 % சொத்துக்களை தர்மம் செய்ய எடுத்திருக்கும் முடிவு மிகவும் அருமையான மற்றும் வரவேற்கத்தக்கதாகும். ஜீவ சேவையே சிவ சேவை என்பதை அறிந்து கொண்டு விட்டார்கள். வேதாந்தா நிறுவனங்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய இதயப் பூர்வமான வாழ்த்துக்கள்
ஸ்டெர்லிட் பழி வாங்கிடிச்சா
ஸ்டெர்லிட் மூடப்பட்டதால் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் குடி கெட்டதுதான் மிச்சம்.. ஸ்டெர்லிட் மூடப்படும் முன்பு வேதாந்த குருமத்தின் சொத்து மதிப்பு வெறும் 60 ஆயிரம் கோடி ஆனால் இன்று அது இரண்டரை லட்சம் கோடி... மூடனே ஸ்டெர்லிட் நிறுவனம் தமிழகத்தில் அரசு அனுமதி பெற்று தொடங்கி நடத்த பட்டது தமிழகம் அனுமதி கொடுக்காமல் இருந்து இருந்தார் அவரகள் குஜராத் அல்லது மஹாராஷ்டிராவில் தொடங்கி இன்றும் எந்த தொந்தரவும் இல்லாமல் நடத்தி கொண்டு இருப்பார்கள் - ஸ்டெர்லிட்ட விட 7 மடங்கு பெரிய காப்பர் தயாரிக்கும் நிறுவனம் கிண்டலக்கோ குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் சீரும் சிறப்புமாய் தனது வெற்றிப்பயணத்தில் மாநில வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறது...
டுமிழர்களை பொறுத்தவரையில் அதானி, அம்பானி, பிர்லா, வேதாந்தா இவர்களெல்லாம் மோசமான கார்பொரேட் முதலாளிகள்.
75% சதம் சொத்துக்கள் சமுக நலனுக்கு அதுவும் இறந்த மகனின் ஆசைப்படி நல்ல ஆத்மா அதான் விரைவில் கடவுளிடம் இணைந்தார் ஓம் ஷாந்தி
அம்மோனியா மனிதர்களுக்கு விஷம் ஆவது நேரடியாக சுவாசித்தால் தான். தூத்துக்குடி ஆலையில் அது நிகழாமல் இருக்க பலப்பல பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு 10 வருடம் முடிந்தவுடனும் அத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாகி அவை புதுப்பிக்கப்பட்டு புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளுக்கு இத்தகைய விதிகள் உலகில் நாளுக்கு நாள் கடுமையாக மாற்றப்படுகின்றன ஏற்ப மாற்றியமைக்க மத்திய அரசு நிதி அளிக்கிறது. அவ்வாறு மாற்றியமைக்கவிட்டால் அம்மோனியா தயாரிக்க அனுமதியும் உரங்கள் விற்பனையின் மானியமும் மறுக்கப்படுகிறது. அதனால் தான் கடந்த 50 ஆண்டுகளாக அம்மோனியா கசிவு சார்ந்த எந்த அசம்பாவிதமும் தூத்துக்குடியில் நிகழவில்லை. அம்மோனியாவை யூரியா அல்லது பொட்டாஷ் பாஸ்பரஸ் கலந்த உரங்களாக மாற்றிவிட்டால் அவை பயிர்களுக்கு சிறந்த உரமாக மாறிவிடும். கசிவால் மனித உயிர்களுக்கும் தீமை செய்யாது. இத்தகைய உரங்களால் தான் இந்திய நாடு இன்று நெல் மற்றும் கோதுமை உற்பத்தியில் தலை சிறந்து ஏற்றுமதி செய்யும் நாடாக மாறிவிட்டது. அதைக்கண்டு பொறுக்காத சிலர் அம்மோனியா குறித்து மக்கள் மனதில் பயத்தை உருவாக்கி உர உற்பத்தியை தடை செய்து பயிர் விளைச்சலை தடுக்க முயற்சிக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடி தாமிர உற்பத்தியை தடை செய்து மக்கள் வயிற்றில் அடித்து நாட்டின் ஏற்றுமதியை ஒழித்த கும்பல் போல் அம்மோனியா குறித்து பேச ஆரம்பித்து அந்த ஆலையையும் மூட வேண்டாம். விவசாயிகளும் தொழிலார்களும் பிழைத்துப்போகட்டும்.மேலும்
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்
-
டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பல்கலையின் ரூ.140 கோடி சொத்துகள் முடக்கம்
-
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்தது
-
போதை பொருள் கடத்தலை தடுக்க பஸ், ரயில் நிலையங்களில் தனிப்படை