நீரா பானம் தயாரிப்பு மாணவியருக்கு பயிற்சி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தேவம்பாடிவலசுவில், வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியர், நீரா பானம் தயாரிப்பு குறித்து பயிற்சி பெற்றனர்.
பொள்ளாச்சி அருகே, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவியரின் கிராம தங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேவம்பாடிவலசு விநாயகா தென்னை உற்பத்தி நிலையத்துக்கு சென்றனர்.
அங்கு, நீரா பானம் தயாரிப்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கம் பெற்றனர். மேலும், தென்னை பாளையில் இருந்து எடுக்கப்படும் நீரா பானம், நிறைய ஊட்டச்சத்துக்களை கொண்டது என விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், நீரா பானம் கெடாமல் இருக்க எவ்வாறு பாதுகாப்பாக பதப்படுத்தப்படுகிறது. மரங்களில் இருந்து எந்த முறையில் பானம் இறக்கப்படுகிறது என்பது குறித்தும் மாணவியருக்கு விவசாயிகள் விளக்கமளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!
Advertisement
Advertisement