பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பிப்., 3 முதல் வேலைநிறுத்தம் 'ஆக்டோ ஜியோ' அறிவிப்பு
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி, 'ஆக்டோ ஜியோ' என்ற அரசு ஊழியர் அமைப்பு சார்பில், பிப்., 3 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்புகளான, 'ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ' அமைப்புகள் சார்பில், இம்மாதம் 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த திட்டத்துக்கு, ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்தனர்; மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தையும் வாபஸ் பெற்றனர்.
இதற்கிடையில், பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள், தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த விஷயத்தில் அதிருப்தியில் இருந்த அந்த சங்கங்கள் ஒருங்கிணைந்து, புதிதாக ஆக்டோ ஜியோ எனும் அமைப்பை ஏற்படுத்தி உள்ளன.
அதன் ஆட்சிமன்ற குழு கூட்டம், தலைமை அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக்டோ ஜியோ சார்பில், வரும் பிப்., 3ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், இடை நிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், பகுதி நேர ஆசிரியர் கண்ணன் உயிரிழப்பை கண்டித்தும், நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள்தான் மக்களா.?! மற்றவர்கள் வெறும் ஜடமா.?! சாமானியர்களுக்கு குடும்பம் இல்லையா?! ஒவ்வொரு ஆட்சியும் இஷ்டத்துக்கு மக்களின் வரிப்பணத்தை அரசு ஊழியர்களுக்கு சம்பளம், சலுகைகள் என வாரியிறைப்பது எதற்காக.?! வாக்கு வங்கிக்காகவா அல்லது வேறு ஏதேனும் நோக்கம் உள்ளதா.?! இவ்வளவு சம்பளம், சலுகைகள் அறிவித்தும் அரசு ஊழியர்களின் உற்பத்தி திறன் உயர்ந்துள்ளதா? லஞ்ச லாவண்யமின்றி பணியாற்றுகிறார்களா? சேவை எண்ணத்தோடு மக்களை மரியாதையாக நடத்துகிறார்களா? அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ஏறியதும் விலைவாசி ஏறிவிடுகிறது. நாங்கள் எப்படிதான் சமாளித்து வாழ்வது.
வேலை செய்யாமல் லஞ்சத்திலேயே காலம் கழிக்கும் இவர்களுக்கு ஓய்வூதியம் கொடுத்தால் ஏற்கனவே காலியாகியிருக்கும் அரசு கஜானா நிலைமை இன்னும் மோசமாகும், அதற்கென இன்னும் வரி அதிகமாகும். தனியார் துறையில் படிப்பு தகுதியும் திறமையும் அறிந்து வேலை சிறப்பாக லஞ்சமின்றி ஓய்வூதியம் இன்றி நடக்கும் அளவுக்கு அரசு துறையில் இல்லை. மக்கள் இதற்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள் கொடுக்கவும் கூடாது. அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு கொடுக்க வேண்டுமென்றிருக்கும் சட்டம் மாதிரி இவர்களின் சொத்து மதிப்பையும் கேட்கவேண்டும்.
அரசு வேலை என்பது வேலை பாக்காமல் சம்பளம் வரும் வேலை. இதில் ஓய்வு ஊதியம் என்பது தேவை இல்லாதது. ஒன்று அல்லது இரண்டு டிகிரி முடித்துவிட்டு, வாழ்நாள் பூரா சம்பளம் வேண்டும் என கேட்பது அநியாயம். ஓய்வுக்கு பிறகு தனியார் நிறுவனங்களில் வந்து வேலை பார்க்க வேண்டும்.மேலும்
-
புதிய அம்ரித் ரயில்: பிரதமருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி
-
தேர்தல் அறிக்கை தயாரிக்க பாஜவில் குழு
-
வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் தமிழகம்: கவர்னர் ரவி
-
கொரிய வீராங்கனை சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
-
எல்லைப்பாதுகாப்பில் முன்பைவிட இந்தியாவுக்கு கூடுதல் பலம்; ராஜ்நாத் சிங்
-
ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து விரைவில் தமிழகம் மீட்டெடுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்