ஏழைகளின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம்
தைத்திருநாளில் தமிழர்களின் இல்லங்களில் இன்பம் பொங்கியதோ இல்லையோ, தி.மு.க., அரசின் கஜானாவில் மது விற்பனை பணம் மட்டும் பொங்கி வழிந்திருக்கிறது. பொங்கல் பரிசு என்ற பெயரில், தமிழக மக்களுக்கு ஒரு கையில் அன்பளிப்பு கொடுத்து, மறு கையில், 'டாஸ்மாக்' வாயிலாக அதை அப்படியே பிடுங்கிக் கொள்வது, ஏழை மக்களின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம் அன்றி வேறில்லை.
மது கோப்பைகளை நிரப்புவதிலும், இலக்கு வைத்து கல்லா கட்டுவதிலும் தி.மு.க., அரசு காட்டும் ஆர்வத்தில், ஒரு சிறு துளி அக்கறையையாவது, சீர்கெட்டு போன சட்டம் - ஒழுங்கை சரி செய்வதில் காட்டியிருந்தால், இன்று தமிழகம் எவ்வளவோ தலை நிமிர்ந்து நின்றிருக்கும். தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது தான், உண்மையான வளர்ச்சியே தவிர, மது விற்பனையில் சாதனை படைப்பது அல்ல.
- அருண்ராஜ்
கொள்கை பரப்பு பொதுச்செயலர், த.வெ.க.,
அனைத்து மாநிலங்களிலும் அரசுக்கு அதிக வருமானம் தருவது மது விற்பனை. குடிப்பவர்களை அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் திருத்தமுடியாதபோது வேறு எவரும் திருத்த முடியாது. இதில் "சுரண்டல்" அடுத்தவர்கள் செய்யமுடியாது. குடிப்பவர்கள் அவர்கள் வருமானத்திலும் கடன் வாங்கியும் "சரக்கு" வாங்கி குடிக்கின்றனர். கள்ள சாராயம் காய்ச்சுபவர்களிடம் வாங்கி குடித்து உயிரை விடாமல் இருக்க ஒவ்வொரு மாநில அரசு அங்கீகரித்த மதுபானங்கள் குடிகாரன்கள் பயன்படுத்துவது சிறந்தது.
அருண் ராஜ் அவர்களே சரியாக சொன்னீர்கள் ஆனால் எல்லாருமே மக்களை ஏமாத்தவே பாக்குறீங்க மக்கள் பாவம் எவன் புதுக்கொடி ஏத்துனாலும் நம்புது நீங்களாவது திருந்துங்க
ஒருகையில் பொங்கல் இலவசம் கொடுத்துவிட்டு, மரு கையினால் அதை பிடுங்கும் திறமை இந்த திருட்டு திமுகவுக்கே உரித்தாகும். முதலில் மக்கள் திருந்தவேண்டும். என்று அவர்கள் இந்த இலவசங்களுக்கு அடிமையாகாமல் இருக்கிறார்களோ, அன்று இந்த நாடு உருப்படும்.மேலும்
-
தனியொருவனாக போராடிய கோலி; இந்திய மண்ணில் முதல்முறையாக தொடரை வென்றது நியூசிலாந்து
-
ஊடகங்களை ஒடுக்கும் ஆம் ஆத்மி அரசு; பஞ்சாப் கவர்னரிடம் பா.ஜ., புகார்
-
ஹாக்கி இந்தியா லீக்: பெங்கால் அணி வெற்றி
-
மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் அபாரம்
-
ஷ்ரேயங்கா தேர்வு: இந்திய அணி அறிவிப்பு
-
பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் யுஏஇ அதிபர்