அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
நமது டில்லி நிருபர்
அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிராக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி, இபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இபிஎஸ் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்
இபிஎஸ்க்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மனுதாரர் சூரிய மூர்த்தி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார். மனுவில், "அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து, அதனை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று (ஜனவரி 09) சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே அமர்வு விசாரித்தது. வழக்கை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
OPS ரொம்ப அமைதியா இருக்காரு. அரசியளிக்கு சரி பட்டு வர மாட்டார்
அண்ணா திமுக பொது செயலாளர் எடப்பாடி எதிராக வழக்கு. எடப்பாடி ஏன் நீக்க வேண்டும். மனுதாரர் வேறு யார் நியமிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.? திமுக போல் தேனாக பேசி நீதிபதி முடிவு செய்ய முடியாது. இது போன்ற உயிர் இழந்து வழக்குக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். எடப்பாடி வென்றாலும் பிஜேபி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. ஸ்டாலினும் சிறுத்தை, காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் பங்கு பெற அழைக்க வேண்டும்.
தீம்கால தான் கரெக்ட்டு .... ஒருத்தன் எதிர்க்க மாட்டான் .... எதிர்த்தா உச்சுரு அவனுதுல்ல ....
எடப்பாடி சும்மாவே ஆடுவாப்ல
இப்ப கால்ல சலங்கைய கட்டி விட்டு கையில கொட்டும் கொடுத்தால் ஆட்டம் எப்படி இருக்கும் இனிமே மோகினி ஆட்டம்தான்...மேலும்
-
திருமண ஹோமம், ஆண்டாள் திருக்கல்யாணம்
-
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
-
இந்தியாவின் வலிமையை காட்டும் சோம்நாத் கோவில் கொடி: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஆபாச உள்ளடக்க விவகாரத்தில் தவறை ஒப்புக் கொண்டது க்ரோக்: 600 கணக்குகள் நீக்கியது
-
நோபல் பரிசை வேறொருவரிடம் பகிர முடியாது: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு
-
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்