சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
வாஷிங்டன்: சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 'ஆப்பரேஷன் ஹாவ்க்' என்ற பெயரில் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்நாட்டு போர் நிலவி வருகிறது. அங்கு, ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. அண்மையில் ஐஎஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தி அமெரிக்கா தாக்குதலின் போது அமெரிக்க பாதுகாப்பு படையினர் இருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். அதிபர் டிரம்ப் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு நிச்சயமாக பதிலடி கொடுப்பேன் என எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்த அமெரிக்கா படைகளின் கவனம் சிரியா மீது திரும்பி உள்ளது. அதிபர் டிரம்ப் உத்தரவின் படி, சிரியாவில் தாக்குதலை ஆரம்பித்துள்ளன. இந்த நடவடிக்கைக்கு, 'ஆப்பரேஷன் ஹாவ்க்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: சிரியாவில் 35க்கும் மேற்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. F-15, A-10 போர் விமானங்கள், டிரோன்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது.
இந்த நடவடிக்கையின் நோக்கம், அமெரிக்க படைகள் மற்றும் நட்புப் படைகள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை தடுப்பது, எதிர்கால அச்சுறுத்தல்களை நீக்குவது மற்றும் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். எங்கள் படையினருக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும், எங்கிருந்தாலும், கண்டுபிடித்து அழித்துவிடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தீவிரவாதிகளை அழிப்பது பாராட்டுக்குரியது. ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் நாடு அதற்கு ஆயுதம், போர் விமானங்கள் கொடுத்து உன் அல்லக்கை நாடாக வைத்து இருக்கிறாய். இந்தியா மேல் உள்ள கோபத்தை இப்படி செய்தால் சரியாகாது.
சிரியா முஸ்லீம் அதிகமுள்ள நாடு, அங்கேயும் கொலையை ஆரம்பித்து உள்ளீர்கள் அமேரிக்கா, உங்களின் மீது தான் உண்மையில் முஸ்லிம்களுக்கு கோவம் வந்திருக்க வேண்டும் எனோ அப்பாவி இந்துக்களிடம் தங்களின் கோவத்தை காட்டுகிறார்கள்
முஸ்லிம்கள் பலம் வாய்ந்தவர்கள் மேல் கோபம் வந்தால் பலம் இல்லாதவர்களை அடிப்பார்கள் . வீரர்கள் .மேலும்
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்
-
டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பல்கலையின் ரூ.140 கோடி சொத்துகள் முடக்கம்
-
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.4,000 குறைந்தது
-
போதை பொருள் கடத்தலை தடுக்க பஸ், ரயில் நிலையங்களில் தனிப்படை