வெனிசுலாவில் இரண்டாவது முறை தாக்குதலுக்கு திட்டம்; முடிவை திரும்பப் பெற்றார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: வெனிசுலாவில் இரண்டாவது முறை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த முடிவை திரும்பப் பெறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும், கடந்த 3ம் தேதி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு முன், தலைநகர் கராகசின், ஏழு இடங்களில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலாவில் இரண்டாவது முறை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். தற்போது அந்த முடிவை அவர் திரும்ப பெற்று இருக்கிறார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: வெனிசுலா அமைதியை நாடுகிறது.
இதன் அடையாளமாக ஏராளமான அரசியல் கைதிகளை விடுவித்து வருகிறது. இது மிகவும் முக்கியமான மற்றும் புத்திசாலித்தனமான செயலாகும்.
அமெரிக்காவும் வெனிசுலாவும் இணைந்து சிறப்பாகச் செயல்படுகின்றன. குறிப்பாக அவற்றின் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் வெனிசுலாவில் இரண்டாவது முறை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த முடிவை ரத்து செய்கிறேன்.
தற்போது அங்கு தாக்குதல் நடத்த தேவையில்லை என்று தெரிகிறது, இருப்பினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கப்பல்களும் தற்போது இருக்கும் இடத்திலேயே நிறுத்தப்படும். விரைவில் 100 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட இருக்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
யாரு அடக்க போகிறார்களோ?
You are printing money and claim from rest of the world hard earned money to just claim as worlds Economic Power. USA is Like a pot with 1000 Holes. Dont worry God/ Nature would teach good lesson
தாதா கேங்ஸ்டர் எல்லாம் கலந்த ட்ரம்ப் உலகத்தை கிருக்குபுடிக்க வைக்கிறார். உலகளாவிய பதற்றம் அனைத்துகைகும் காரணம் இன்றைய அமெரிக்கா.
இன்றைக்கும் டிரம்ப் ரேட்டிங் 89%. Fox news
அமெரிக்கா ராகூல் காந்தி இவன்...
ரஹூல் குடும்பம் ஓர் உலகளாவிய ஊழல் மாபியா. டிரம்ப் எந்த காலத்திலும் ஊழல் செய்ததில்லை. மிரட்டுவார் அவ்வளவே.மேலும்
-
திருமண ஹோமம், ஆண்டாள் திருக்கல்யாணம்
-
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
-
இந்தியாவின் வலிமையை காட்டும் சோம்நாத் கோவில் கொடி: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஆபாச உள்ளடக்க விவகாரத்தில் தவறை ஒப்புக் கொண்டது க்ரோக்: 600 கணக்குகள் நீக்கியது
-
நோபல் பரிசை வேறொருவரிடம் பகிர முடியாது: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு
-
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்