வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் லாலு குடும்பத்துக்கு சிக்கல்; குற்றச்சாட்டு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு
புதுடில்லி: ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 2004 - 09 வரை, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நிலத்தை லஞ்சமாக பெற்றதாக அவர் மீது புகார் எழுந்தது.
இது தொடர்பாக வழக்கு டில்லியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உட்பட 11 பேர் மீது, கடந்த அக்., 13ல், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதை நீதிமன்றமும் ஏற்றது.
இந்த வழக்கில், விசாரணைக்கு தடை விதிக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்நிலையில் இன்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு மீதான அடுத்த விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு நீதிபதி விஷால் கோக்னே ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் லாலுவின் குடும்பத்தினர் மீதான இந்த ஊழல் வழக்கு விசாரணை தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
வாசகர் கருத்து (6)
M Ramachandran - Chennai,இந்தியா
09 ஜன,2026 - 20:18 Report Abuse
பாவம் லொள்ளு கடைய்யசி காலத்தில் பிரச்னைய்யகள் காலை சுத்துது. லல்லுவைய்ய பொறுத்த மட்டில் தமிழ் நாட்டிற்கு ரயில்வே அமைச்சராக வேலு அமைச்சராக அவர்கள் மூலம் நல்லதெ செய்துள்ளார். 0
0
Reply
sunny - ,
09 ஜன,2026 - 19:18 Report Abuse
NOTHING WILL HAPPEN 0
0
Reply
xxxx - cbe,இந்தியா
09 ஜன,2026 - 19:05 Report Abuse
சீக்கிரமே குற்றசாட்டு பதியரிங்க .... 0
0
Reply
Sekar Times - ,இந்தியா
09 ஜன,2026 - 18:30 Report Abuse
ஊழல் லஞ்சம் ஒழிய மரண தண்டனை மட்டுமே தீர்வாகும் 0
0
Reply
Bala Sethuram - ,இந்தியா
09 ஜன,2026 - 18:09 Report Abuse
லல்லுவையும் லல்லு குடும்பத்தினரையும் இங்கே வந்து திராவிட மாடல் ட்ரைனிங் எடுக்க சொல்லுங்கள் . எல்லாத்தயும் சுளுவா சமாளிக்கலாம். 0
0
Barakat Ali - Medan,இந்தியா
09 ஜன,2026 - 19:23Report Abuse
அப்படிப்பார்த்தா விடியா மாடல் கிரிமினல்கள் பல தடவை கயித்துல தொங்கவேண்டி வரும் .... 0
0
Reply
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!
Advertisement
Advertisement