'பொங்கல் பரிசு தொகைக்காக பயிர் கடன் பணம் மடைமாற்றமா?'

2

சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:

தமிழக கூட்டுறவு சங்கங்களில், பழைய பயிர் கடன் முழு தொகையையும் கட்டிவிட்டு, புதிய கடன் புதுப்பிப்புக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், பொங்கலுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 3,000 ரூபாய் வழங்க, தி.மு.க., அரசிடம் பணம் இல்லாமல், விவசாயிகளின் பயிர் கடன் பணத்தை மடைமாற்றி, பல ஆயிரக்கணக்கான விவசாயிகளை மன உளைச்சலுக்கு தள்ளியிருக்கிறது.

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதே விவசாயத்தை போற்றுவதற்காகத்தான் எனும்போது, தங்களது தேர்தல் விளம்பரத்துக்காக, தமிழக விவசாயிகளை திட்டமிட்டு மோசடி செய்திருக்கிறது தி.மு.க., அரசு.

உடனே, விவசாயிகளின் பயிர் கடன்களை புதுப்பித்து, அதற்கான பணத்தை விடுவிக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கையுடன் தி.மு.க., அரசு விளையாட வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement