ஜாதி பெயரை நீக்கும் உத்தரவு: ஐகோர்ட் இடைக்கால தடை
சென்னை: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் பெயரில் இடம்பெற்றுள்ள ஜாதிப் பெயரை நீக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு, சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அந்த சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, 'சங்கங்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயரை நீக்கி, சங்க சட்டத் திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்' என, கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.பி.சொக்கலிங்கம் ஆஜரானார்.
சங்கங்களின் பெயரில் உள்ள ஜாதிப் பெயரை நீக்க வேண்டும் என்ற, தனி நீதிபதி உத்தரவை, தென்னிந்திய செங்குந்த ம காஜன சங்கத்துக்கு அமல்படுத்த இடைக்கால தடை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்., 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
அரசாங்க நிலத்தில் பாலத்தை கட்டி நாயுடு பாலம் என பெயர் சூட்டினார்கள்..... அதே நாயுடுக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைத்து அதற்கு செம்மொழி பூங்கா என அழைக்கிறார்கள்..... அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு!!!!
அரசாங்கமே கோவை பாலத்திற்கு கிட் நாயுடு பாலம் என்று ஜாதி பெயர் வைக்குமாம், ஆனால் சங்கத்திற்கு ஜாதி பெயர் வைக்க கூடாதாம். தமிழ்நாட்டில் தமிழ் ஜாதிகள் மட்டும் தான் மறைக்க படுகிறது. திராவிட ஜாதிகள் செழுமையாக உள்ளது. நாயர் பாலம், ரெட்டி தெரு இப்படி
அரசு பதிவுகளில் எல்லாம் இன்னும் ஜாதிப்பெயரை வைத்து பாகுபாடு படுத்திதானே நலத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன .ஜாதிகளை ஒழிக்கும் ஒரே வழி இன்று பிறக்கும் குழந்தைகளில் இருந்து எந்தவிதமான பதிவுகளிலும் ஜாதிப்பெயரை பதியக்கூடாது என்று சட்டம் இயற்றவேண்டும் .பள்ளிகளில் சேர்க்கும் பதிவுகளிலெல்லாம் ஜாதிப்பெயர்களைப்பதியக்கூடாது. எந்த ஒரு நலத்திட்டங்களுக்கும் ஜாதியைவைத்து வழங்ககூடடாது .அவர்களுடைய பொருளாதார நிலைமையை வைத்துதான் நலன்கள் வழங்கப்படவேண்டும்.. எங்குமே ஜாதிப்பெயர்களை யாரும் உபயோகப்படுத்தக்கூடாது, செய்தால் கடுமையான தண்டனைக்கு சட்டம் இயற்றவேண்டும். ஆனால் இல்லாமல் அரசியல் செய்யமுடியாது.
ஜாதிப் பெயர் இருந்தால் என்ன கஷ்டம். விருப்பப் பட்டவர்கள் வைத்துக் கொள்ளட்டுமே? வடநாட்டில் பெரும்பான்மையானவர்களின் துணை பெயர் பெரும்பாலும் ஜாதிப் பெயர்களே. அவற்றை வைத்துக்கொள்வது அவரவர்கள் அடிப்படை உரிமை அல்லவா. இதில் அரசு எப்படி தலை இடலாம்?
இனி எத்தனை காலத்திற்கு சமூக பிரிவு பெயரை வைத்தே அரசியல் செய்யப் போகிறீர்கள் ? எந்த சங்கமானாலும் நேர்மை கொண்டு மற்ற சமூக பிரிவினரையும் மதிப்பதே உண்மையான தமிழர்க்கு அழகு . நீதி துறையும் இதனை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கினால் தமிழகம் மிளிரும் .
நாடார் மஹாஜனசங்கம் வெறும் மஹாஜனசங்கம் என்றாகி - அபகரிக்க வசதியாக இருக்கும்.
ஜாதி பெயரை நீக்குவதால், ஜாதி ஒழியாது. ஆனால் பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர் என்று எந்த நாள் பெருமையாக அவர்கள் போட்டுக்கொள்கிறார்களோ,
பெயரை நீக்கிநாள் ஜாதிகள் ஓடி விடுமா?