'ஜெயலலிதா மகள்' என கூறியவரை விரட்டியடித்த அ.தி.மு.க., தொண்டர்கள்
சென்னை: ஜெயலலிதா மகள் எனக் கூறி, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வந்த ஜெயலட்சுமியை, அக்கட்சியினர் விரட்டியடித்தனர்.
வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம், கடந்த ஆண்டு டிசம்பர் 15 முதல் 23 வரையும், 28 முதல் 31ம் தேதி வரையும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அப்போது விருப்ப மனு பெற்றவர்கள், அவற்றை பூர்த்தி செய்து உடனடியாக சமர்ப்பிக்குமாறு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தன்னை ஜெயலலிதா மகள் எனக் கூறி வரும் ஜெயலட்சுமி என்பவர், ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட, கடந்த டிசம்பரில் விருப்ப மனு பெற்றதாக கூறப்படுகிறது. விருப்ப மனு பெற்றவர்களிடம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இரண்டாவது நாளாக நேற்று காலை, பழனிசாமி நேர்காணல் நடத்தினார்.
அப்போது, அங்கு கரில் வந்த ஜெயலட்சுமி, தனக்கு நேர்காணலுக்கான அழைப்பு வந்திருப்பதாகக் கூறி, அலுவலகத்திற்குள் நுழைய முயன்றார். அவரை, அங்கிருந்த அ.தி.மு.க., நிர்வாகிகள், 'நேர்காணலுக்கு வரக்கூடாது' எனக்கூறி தடுத்து, விரட்டி அடித்தனர்.
பின்னர் பேட்டியளித்த ஜெயலட்சுமி, ''ஜெயலலிதா இருக்கும்போதே, நான் அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை பெற்றுள்ளேன். ஆண்டிபட்டியில் போட்டியிட விருப்ப மனு அளித்ததை அடுத்து, என்னை நேர்காணலுக்கு வருமாறு அழைத்தனர். அதன் அடிப்படையிலேயே, தலைமை அலுவலகத்திற்கு வந்தேன். ஆனால், என்னை அனுமதிக்கவில்லை. கட்சியினர் என்னை அசிங்கமாக திட்டி, அடித்து வெளியேற்றினர். சிலர் கற்களை வீசி தாக்கினர். இதை, கட்சியின் பொதுச்செயலரான பழனிசாமி உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அதற்கான பலனை அவர் அனுபவிப்பார்,'' என்றார்.
சசியின் கடைசி முயற்சி இது.
1. ஒருவேளை. மகளென்று கூறியது உண்மையாயிருந்தால் என்ன செய்திருக்க முடியும்? சொன்னது பொய்யாகயிருந்திருந்தால் காவல் துறையினரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.. . 2. ஒருநாட்டின் தலைவனை தேர்வுச் செய்யும்.. மக்கள் தெளிவான விலாசமுள்ள தலைவனையே தேர்வுச் செய்ய வேண்டும். அரசுத் துரைக்கு மனு செய்யும் போது இந்தவிதி முறைகள் கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும். ஆனால் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் தேர்வுச் செய்வதில் மக்கள் எதையும் கண்டுக் கொள்வதில்லை. அதனால்தான். நாடு மற்று அதன் ஆட்சிகள் நிர்வாகம் இன்றும் இந்த அலங்கோலத்தில் உள்ளது. இனியென்றும் இப்படித்தான் உலகமும் இன்றும் இப்படித்தான். இருக்கின்றது.
1. ஒருவேளை. மகளென்று கூறியது உண்மையாயிருந்தால் என்ன செய்திருக்க முடியும்? சொன்னது பொய்யாகயிருந்திருந்தால் காவல் துறையினரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.. . 2. ஒருநாட்டின் தலைவனை தேர்வுச் செய்யும்.. மக்கள் தெளிவான விலாசமுள்ள தலைவனையே தேர்வுச் செய்ய வேண்டும். அரசுத் துரைக்கு மனு செய்யும் போது இந்தவிதி முறைகள் கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும். ஆனால் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் தேர்வுச் செய்வதில் மக்கள் எதையும் கண்டுக் கொள்வதில்லை. அதனால்தான். நாடு மற்று அதன் ஆட்சிகள் நிர்வாகம் இன்றும் இந்த அலங்கோலத்தில் உள்ளது. இனியென்றும் இப்படித்தான் உலகமும் இன்றும் இப்படித்தான். இருக்கின்றது.
இருக்கிற பிரச்சனை போதாதென்று இது வேறயா. ஒரே கஷ்டமப்பா. எதுக்கும் ஓ பி எஸ் கட்சியில் டிரை பண்ணாலாமே.
கடப்பாரை மூலமாகவும் செக் வைக்கலாம்...
ஒரு வேளை அம்மாவின் வாரிசுகள் இருந்தால் கூட இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் பதவி .....
சீமானுக்கு ஒரு நிஜ விஜய லட்சுமி .. ஆனால் இப்போ புது உருட்டு ஆதிமுகவிற்கு டுபாக்கூர் ஜெயலட்சுமி .. தமிழகத்துக்கு எல்லாமே லட்சுமி சீரிஸ் சீனா மேக் எரியாத பல்பாகவே இருக்கு ஓயீ .
பைத்தியங்கள் யாரை வேண்டுமானாலும் உறவு சொல்லி அழைத்துக்கொள்ளுங்கள். இந்த கிறுக்காவது பரவாயில்லை இத்தோடு உளறிக்கொண்டு நின்றுவிட்டது. பொதுவாகவே அம்மா ஜெ அவர்களை அவரது தொண்டர்கள் அம்மா அம்மா என்று பாசத்தோடு அழைப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் பிற கட்சியினர் கூட அவரை அம்மா என்றே அழைப்பார்கள். உலகெங்கும் உள்ள இந்தியர்கள் பலரும் அவரை அம்மா என்றுதான் அழைப்பார்கள். இந்த புகழுக்கு ஆசைப்பட்டு தன்னையும் அப்பா என்று அழைக்க வலுக்கட்டாயமாக சொல்லவைத்து புகழடைய ஆசைப்பட்டு மூக்கறுபட்டார்கள். அதுபோல இதுவும் ஒரு கிறுக்கு. விட்டுவிடுங்கள் அம்மா பெயரை சொன்னதால் தப்பித்தது என்று விட்டுவிடுங்கள். ஆனால் இந்த அப்பா ன்னு கூப்பிட ஆசைப்படுகின்ற பைத்தியங்களை சீக்கிரமா விரட்டியடிக்க முன்வர வேண்டும். பைத்தியங்கள் பலவகை.
உனக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம். நீ தான் கட்சி மாறி விட்டாயே. நீ அம்மாவை பற்றி பேச தகுதியே இல்லை .
இந்த அம்மாவில் அறிக்கையைப் படிக்கயில் இவர் வம்புக்காகவே வந்துள்ளார் போல் தெரிகிறது.
செக் வைக்க ஒருவர் இருக்கிறார் என்பதை ஜெயலட்சுமி நிரூபித்து இருக்கிறார்.
check or cheque defined under negotiable instruments act. Party sec 138 of negotiable instruments act.