கமேனிக்கு எதிரான போராட்டம்; தீவிரப்படுத்த ஈரான் இளவரசர் அழைப்பு
டெஹ்ரான்: ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும்படி, வெளிநாட்டில் வசித்து வரும் அந்நாட்டு இளவரசர் ரெசா பஹ்லவி அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானில், 1979ல் ஏற்பட்ட கிளர்ச்சியால், அப்போதைய மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இஸ்லாமிய குடியரசு ஆட்சி பொறுப்பை ஏற்றது. அந்நாட்டு மன்னர் முகமது ரெசாஷா பஹ்லவி வெளிநாட்டில் தஞ்சமடைந்தார். அந்நேரம், இளவரசர் ரெசா பஹ்லவி விமானப்படை பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருந்ததால், அவரால் நாடு திரும்ப முடியவில்லை. 40 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவில் அவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசுக்கு எதிராக, கடந்த டிச., 28 முதல் மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில், 65 பேர் உயிரிழந்துள்ளனர். 2,300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணைய சேவை முடக்கப்பட்டுள்ள தால், முழுமையான பலி எண்ணிக்கை என்ன என்பது தெரியவில்லை.
இதையடுத்து, அமெரிக்காவில் வசிக்கும் இளவரசர் பஹ்லவி, ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும்படியும், முக்கிய நகரங்களை கைப் பற்றும்படியும் போராட்டக் காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசு அலுவலகங்கள், வானொலி, டிவி நிலையங்கள் அமைந்துள்ள நகரின் முக்கிய பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வந்தால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என, அவர் கருதுகிறார்.
@block_Y@
ஈரானில் கடுமையான மதக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், பொது வெளியில் ஹிஜாப் எனும் முகத்தை மறைக்கும் துணியை அணியாததால், மாசா அமினி என்ற இளம்பெண், அந்நாட்டு பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்ட நிலையில், சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.
இது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கும் ஈரானில், தற்போது இளம்பெண்கள் பொது வெளியில் ஈரான் உயர் தலைவர் கமேனியின் புகைப்படத்தை எரித்து, அந்த நெருப்பில் சிகரெட் பற்ற வைக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. ஹிஜாப்பை கழற்றி எறிந்தும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
block_Y
ஈரானிய பெண்கள் எது அடிமை தனம் என்று உணர்ந்து கொண்டார்கள்... ஆனால் இங்குள்ள மூளை சலவை செய்யப்பட்ட தற்குறி மாணவிகள் மத கலவரத்தை ஏற்படுத்த முயலுகிறது.. அதுக்கு திருட்டு திராவிட கும்பலும் கான் கிராசும் துணை போகின்றன....
முல்லா கொமைனியின் பிடியிலிருந்து ஈரான் வெளியேற வாழ்த்துக்கள். ஆனால் அது நடைபெறுமா என்பது சந்தேகம் தான். காக்கா குருவியை போன்று கொஞ்சம் ஈவுஇரக்கமின்றி மக்களை சுட்டு தள்ளுகிறார்கள்.மேலும்
-
திருமண ஹோமம், ஆண்டாள் திருக்கல்யாணம்
-
டில்லியில் டிஜிட்டல் அரெஸ்டில் ரூ.15 கோடி இழந்த டாக்டர் தம்பதி
-
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
-
இந்தியாவின் வலிமையை காட்டும் சோம்நாத் கோவில் கொடி: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஆபாச உள்ளடக்க விவகாரத்தில் தவறை ஒப்புக் கொண்டது க்ரோக்: 600 கணக்குகள் நீக்கியது
-
நோபல் பரிசை வேறொருவரிடம் பகிர முடியாது: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு