புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம்

செஞ்சி: செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மற்றும் செஞ்சி கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்திற்கு தலைமையாசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். பி.டி.ஏ., தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் கோகுல கிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு கோஷங்களுடன், பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

ரோட்டரி சங்க செயலாளர் நாராயணமூர்த்தி, பொருளாளர் சக்திவேல், உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், குமார், ராஜேந்திரன், மாணிக்கம், ஆசிரியர்கள் செந்தில்குமார், சக்திவேல், சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஏழுமலை நன்றி கூறினார்.

Advertisement