எலும்புக்கூடாக மாறிய மின்கம்பத்தால் அச்சம்
கும்மிடிப்பூண்டி: ஆரம்பாக்கம் அணுகுசாலையில் மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, எலும்புக்கூடாக மாறியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில், சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இப்பகுதி அணுகுசாலையில் உள்ள மசூதி அருகே மின்கம்பம் சேதமடைந்து, கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, எலும்புக்கூடாக மாறியுள்ளது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், ஆரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும், மின்வாரிய அதிகாரிகள், மின்கம்பங்கள் முறையாக பராமரிக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த கம்பம் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!