ஐவர் பூப்பந்தாட்ட போட்டி 415 வீரர்கள் பங்கேற்பு
திருப்பூர்: இமாலாயா விளையாட்டுக்குழு சார்பில், மாநில அளவிலான சீனியர் ஆண்கள் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி, அகில இந்திய அளவிலான பெண்கள் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி, திருப்பூர், கொங்குமெயின் ரோடு, சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.
பெண்களுக்கான போட்டியில் நாடு முழுதும் இருந்தும், ஆண்களுக்கான போட்டியில் தமிழகம் முழுதும் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில், மொத்தம், 53 அணிகள், 265 வீரர்களும், பெண்கள் பிரிவில், 22 அணிகள், 110 வீராங்கனையர் பங்கேற்றனர்.
முன்னதாக போட்டிகளை பாப்பீஸ் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் சிவக்குமார், மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தனர். நேற்று லீக் மற்றும் காலிறுதி போட்டிகள் நடந்தது. இன்று அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நடக்கிறது.
முதலிடம் பெறும் ஆண்கள் அணி, 30 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், பெண்கள் அணி, 20 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பரிசுக் கோப்பையை தட்டிச் செல்லும்.
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!