சாரல் மழையுடன் கடும் பனியால் பொதுமக்கள் அவதி


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கடும் குளி-ருடன், சாரல் மழையும் பெய்ததால், மக்கள் அவ-தியடைந்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்-களாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இரு நாட்களுக்கு, வட மாவட்டங்-களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கடும் பனிப்பொழி-வுடன் நேற்று சாரல் மழையும் பெய்ததால், மக்கள் அவதிக்கு ஆளாகினர். கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நண்பகலில் கூட சூரியன் எட்டிப் பார்க்க-வில்லை.


மாறாக கடும்குளிர் வாட்டி வதைத்தது. பகல் நேரத்திலேயே வீட்டின் அருகில், விறகுகளை தீயிட்டு மக்கள் குளிர் காய்ந்தனர். சாலைகளில் டூவீலர்களில் சென்றவர்கள், குளிரில் நடுங்கிய-படி வாகனங்களை ஓட்டிச் சென்றனர். மாவட்-டத்தில் அதிகரித்து வரும் குளிரால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி தொல்-லையால் அவதியடைந்து வருகின்றனர்.

Advertisement