பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு
கோல்கட்டா: பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்கு வங்கம் சிலிகுரி அருகே கோயில் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கோயிலுக்கான அடிக்கல்லையும் நாட்டி அவர் பேசினார். அப்போது கூறியதாவது;
பாஜ ஆளுகின்ற மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை செய்யப்படுகின்றனர். இங்கே மேற்கு வங்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் எந்தவி தொந்தரவும் இன்றி அமைதியாக வாழ்கின்றனர்.
மற்ற மாநிலங்களில் மட்டும் வங்க மொழி பேசுபவர்கள் ஏன் குறி வைக்கப்படுகிறார்கள்? அசாம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், டில்லி, பீஹாரில் தாக்கப்படுகின்றனர்.
மக்களை தாக்குவது என்பது மதம் அல்ல, உயிர் கொடுப்பது தான் மதம். கடவுள் ஒருவரே என்று மகாத்மா காந்தி கூறி உள்ளார்.
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
வங்க மொழி பேசும் மக்கள் வங்க தேசத்தில் கொலை செய்யப்படுவது அம்மையாருக்கு தெரியவில்லையா அல்லது புரிய வில்லையா அல்லது புரிந்தும் புரியாததுபோல நடிக்கிறாரா முதலில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு நடைபெறும் கொலைகளுக்கு ஆர்ப்பாட்டம் செய்து அவர்களுக்கு துணையாக நில்லுங்கள்
வங்க மொழி பேசுவது சரி, அவர்கள் இந்தியர்கள், பங்களாதேசிகளா?
வங்கதேசத்தில் சித்திரவதைக்கு உள்ளாகும் ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க தெரியவில்லை இந்த அம்மாவுக்கு. வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்திரவதை பற்றி பேசுகிறார். அப்படி எதுவும் இல்லை. சும்மா பொய் குற்றச்சாட்டு.
பொய் குற்றச்சாட்டு.
தமிழ்நாட்டில் அதை விட அதிகம்.மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்