சூதாட்ட இணையதள பக்கங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி
புதுடில்லி: சட்டவிரோதமாகச் செயல்பட்ட 242 சூதாட்ட இணையதள பக்கங்களை இன்று (ஜன. 16) மத்திய அரசு முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டவிரோதச் சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்து மக்கள் தவிப்பதை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் விளையாட்டுச் சட்டம் அமலான பின், சட்ட விரோத சூதாட்ட செயலி மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று சட்டவிரோதமாகச் செயல்பட்ட 242 சூதாட்ட இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கி உள்ளது.
ஆன்லைன் விளையாட்டுச் சட்டத்தின்கீழ், மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. ஆன்லைன் விளையாட்டுச் சட்டம் அமலான பின், இதுவரை 7800க்கும் மேற்பட்ட சட்டவிரோத சூதட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இளைஞர்களைப் பாதுகாப்பதற்கும், சட்டவிரோத தளங்களால் ஏற்படும் நிதி மற்றும் சமூகத் தீங்குகளைத் தடுப்பதற்கும் அரசு கொண்டுள்ள உறுதியை காட்டும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
www என்பதை தடை செய்து iii endru சென்சார்ட் வெப்சைட் வரும் வரைக்கும் ஒன்றும் செய்ய முடியாது. iii. indian. com only. with all right information.
என் நண்பர் விளையாடும் வெளிநாட்டு சூதாட்ட செய்யலி இன்னும் முதக்கப்படவில்லை, செய்தி எல்லாம் போலி செய்தி.
இதுவே திமுகவும் ஊழல் காங்கிரஸ் இரண்டும் மத்தியில் இருந்திருந்தால் அந்த இணையதள ஓனர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு முடக்காமல் அனுமத்திதுக்கொண்டு இருந்திருப்பார்கள். மோடிஜிடா மக்கள் மீது அக்கறை கொண்ட ஊழல் லஞ்சமற்ற தேசியவாதிடா.....
இதே போல் ஆபாச இணையதளங்களும் அதிகம் முடக்கப்பட வேண்டும் இதனால் இளைய தலைமுறை பாதிக்கப்படுகிறது
சரியாக சொன்னீங்க. அடுத்த தலைமுறை பல முனை சீரழிவுகளிலிருந்து காக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒரு சந்ததி சீரழிந்தால் நாடு மீள்வது கடினம்.மேலும்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்