விஐபி ஒதுக்கீடு இல்லை, உள்ளூர் உணவுகள்: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சிறப்பு அம்சங்கள்
- நமது சிறப்பு நிருபர் -
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில், விஐபி மற்றும் எமர்ஜென்சி ஒதுக்கீடு ஆகியவை இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ரயிலில் உள்ளூர் உணவுகள் வழங்கப்பட உள்ளது.
வந்தே பாரத் ரயிலுக்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதில் முதல் ரயிலை மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் இருந்து அசாமின் கவுகாத்தி வரை இம்மாத இறுதி முதல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் ரயில்வே மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ரயில் தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: படுக்கை வசதிகள் கொண்ட முதலாவது வந்தே பாரத் ரயில், பொது மக்களுக்கானதாக இருக்கும். இதில் விஐபிக்கள் அல்லது எமர்ஜென்சி கோட்டாவுக்கு அனுமதி இல்லை. ரயில்வே உயர் அல்லது மூத்த அதிகாரிகள், பாஸ் மூலம் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
காத்திருப்பு பட்டியலை தவிர்க்க உறுதி செய்யப்பட்ட டிக்கெட்கள் மட்டுமே வழங்கப்படும். பயணிகளுக்கு போர்வைகள், விரிப்புகள் அனைத்தும்,மற்ற ரயில்களை காட்டிலும் சிறந்ததாகவும், நவீனமாகவும் இருக்கும்.
இந்த ரயிலில் செல்லும் பயணிகள், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன், வெளிப்படையான டிக்கெட் முறைகள் மற்றும் சீரான விதிமுறைகளை அனுபவிப்பார்கள். அவர்களுக்கு உள்ளூர் உணவுகள் வழங்கப்படும். அனைத்து ஊழியர்களுக்கும் சீருடை அணிவார்கள். இது இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலில் 3ம் ஏசி வகுப்பு வசதி கொண்ட 11 பெட்டிகளும், 2ம் வகுப்பு ஏசி கொண்ட 4 பெட்டிகளும், முதல் வகுப்பு ஏசியுடன் ஒரு பெட்டிகளும் இணைக்கப்பட்டு இருக்கும். ரயிலில் 3ம் ஏசி வகுப்புகளில் 611 பெர்த்களும், 2ம் ஏசி வகுப்புகளில் 188 பெர்த்களும், முதல் வகுப்பு ஏசியில் 24 பெர்த்களும் இருக்கும். மொத்தம் 823 பெர்த்கள் இருக்கும் வகையில் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மோடிஜிக்கு நன்றிகள். ரயில்வே பணியாளர்களுக்கு நன்றிகள். படிக்கும்போதே ரயிலில் பயணம் செய்ய வேண்டும் போல இருக்கு.
சென்னையில் இருந்து திருச்சி வரை வந்தே பாரத் ரயிலில் சென்று அன்று மாலை மீண்டும் வந்தே பாரத் மூலமாக திரும்ப பயணம் செய்த போது ஏற்பட்ட அனுபவம் என்னவென்றால்,வழங்கப்படும் உணவு தரமாக இல்லை. மேலும் குறும் செய்தி மூலம் சொல்லப்பட்ட இரவு உணவுக்கு பிறகு வழங்கவேண்டிய தேநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து சற்று கோபமாக கேட்ட பின்னர் எனக்கு மட்டுமே தேநீர் வழங்கப்பட்டது. மற்ற எந்த ஒரு பயணிக்கும் கொடுக்கவில்லை. காரணம் தனியார் நிறுவனங்கள் மூலமாக அந்த ரயிலில் உணவு கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்து கொண்டேன்.
வெறும் AC coach மட்டும் தானா? Normal Non-AC coach - ஐ சுத்தமா தூக்கிட்டிங்களா?
ஐயா எங்கே இருக்கீங்க? வந்தே பாரத் ரயில் இப்போதே முழுவதும் குளிர்சாதன ரயில்தான் .
அப்போ ஓஞ்சு நாளில் இது தனியார் ரயிலாக மாற்ற பட வாய்ப்புகள் அதிகம்.
மேற்கு நாடுகளில் அணைத்து போக்குவரத்துக்கு துறைகளும் தனியார்துறை தான் அதனால் தான் அங்கு போக்குவரத்துத்துறை சிறப்பாக நடைபெறுகிறது
why the first train is starting at kalkata to asam, the bangaladesh will entering purpose ?
தமிழக அறநிலையத்துறை அமைச்சருக்கு அனுப்புங்கள். VIP , சிபாரிசு கட்டண தரிசனத்திற்கு முற்றுப்புள்ளி தேவை.
மிகவும் சுருக்கமான நல்ல செய்தி.
Excellent posting of New. Very simple also.
மிகவும் அருமை. மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்மேலும்
-
வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்; முதல்வர் ஸ்டாலின்
-
பண்டிகை நாளில் குட்நியூஸ்; தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.480 சரிவு
-
திருவள்ளுவர் தின விழா விருதுகளை வழங்கினார் முதல்வர்
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்; ஆசிரியர் வீட்டுக்கு தீ வைத்து அட்டூழியம்
-
தமிழ் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு எடுத்துக்காட்டு திருவள்ளுவர்; பிரதமர் புகழாரம்
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் கட்ட நடவடிக்கை; காசா அமைதி வாரியம் அமைத்தார் அதிபர் டிரம்ப்