வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்; ஆசிரியர் வீட்டுக்கு தீ வைத்து அட்டூழியம்
டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ஆசிரியர் வீட்டுக்கு கும்பல் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றதிலிருந்து அங்கு ஹிந்துக்கள் மீதான வன்முறை தீவிரமடைந்து வருகிறது. கடந்தாண்டு, ஜூன் 6ம் தேதி முதல் இந்தாண்டு, ஜனவரி 5ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நாடு முழுவதும், 45 மாவட்டங்களில் 116 கொலைகள் நடந்துள்ளன.
கொலை, கொள்ளை, வீடுகள், வணிக நிறுவனங்கள், கோவில்கள் சூறையாடல், தீ வைத்தல், போலி மத குற்றச்சாட்டுகளின் பேரில் சித்ரவதை, பாலியல் வன்கொடுமை முயற்சி என ஹிந்துக்கள் மீது பல தாக்குதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 51 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தற்போது தலைதூக்கி உள்ள வன்முறையில் ஹிந்துக்கள் 8 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு உள்ளனர். வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு ஹிந்து குடும்பத்தின் வீடு குறிவைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. ஆசிரியர் பிரேந்திர குமார் டேயின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (18)
ராஜா - Chennai,இந்தியா
16 ஜன,2026 - 20:08 Report Abuse
இது தான் இந்துக்களின் உண்மையான நிலை. அடித்து கொன்றாலும் நாய் கூட கேட்காது. 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
16 ஜன,2026 - 19:50 Report Abuse
பயங்கரதேஷ் என்று பெயர் மாற்றம் தேவை. கல்விக்கண் கொடுத்த ஆசிரியர் வீட்டை கொளுத்திய வெறி பிடித்தவர்கள். 0
0
Reply
Thirumal Kumaresan - singapore,இந்தியா
16 ஜன,2026 - 18:43 Report Abuse
ஐநா சபையை கலைத்துவிடலாம் என நினைக்கிறேன், எங்கு அநியாயம் நடந்தாலும் கண்டும் காணாமல் போக ஒரு சபை தேவையா. அதற்க்கு சில வீட்டோ அதிகாரம் இழைத்தவனை பிடுங்கி சாப்பிட 0
0
Reply
Venugopal S - ,
16 ஜன,2026 - 14:31 Report Abuse
சும்மா ஹிந்து ஹிந்து என்று புலம்ப வேண்டாம். பங்களாதேஷ் வேறு நாடு, அதன் உள்நாட்டு விவகாரங்களில் நம் நாடு தலையிடுவதோ அல்லது அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதோ அத்தனை எளிதல்ல. சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பலவிதமான பிரச்சினைகள் வரும். நம் நாடு ஒன்றும் அமெரிக்கா இல்லை! 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
16 ஜன,2026 - 13:33 Report Abuse
மத்திய அரசு ஏன் சும்மா இருக்கிறது. 0
0
Reply
kulanthai kannan - ,
16 ஜன,2026 - 13:06 Report Abuse
மத அடிப்படையில் மக்கள் பரிமாற்றம் ஒரே தீர்வு 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
16 ஜன,2026 - 12:46 Report Abuse
பயிந்தாங்கொள்ளி அரசாங்கம், போலிஸ். ஆட்சியை ராணுவத்திடம் கொடுத்து விட்டு எல்லோரும் ஆட்சியை விட்டு விலகி வீடுகளுக்கு செல்வது நல்லது! 0
0
Reply
rajasekaran - neyveli,இந்தியா
16 ஜன,2026 - 12:40 Report Abuse
காங்கிரஸ் ஆட்சியே தேவலை போல தெரியுது. மோடி வெறும் வெத்து வெட்டு தான் போல இருக்கு. யாருக்கும் பயப்பட கூடாது. இறங்கி அடிக்க வேண்டியது தான். என் மவுனம் காண்கிறார் என்று தெரியவில்லை. . 0
0
ஜூவி - ,
16 ஜன,2026 - 14:12Report Abuse
காங்கிரஸ் ஆட்சியில் இந்தியால காஷ்மீர் அவ்வளவு கொலை நடந்தது. அதுவே தேவலாம் என்று சொன்னால் எப்படி. அப்ப இந்த வாய் எங்க போனது 0
0
Reply
ஜெகதீசன் - ,
16 ஜன,2026 - 12:10 Report Abuse
அங்குள்ள இந்துக்களை நாம் அழைத்து வர வேண்டும். அல்லது, அமெரிக்கா வெனிசுலாவில் செய்ததை இங்கு நாம் செய்ய வேண்டும். 0
0
Santhakumar Srinivasalu - ,
16 ஜன,2026 - 14:16Report Abuse
மிக சரியான கருத்து! 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16 ஜன,2026 - 11:46 Report Abuse
மத்திய அரசு இனியும் மவுனம் சாதிப்பது சரியில்லை. வெறும் எச்சரிக்கை செய்தால் மட்டும் போதாது. ஒரு தாக்குதல் நடத்தி வங்கதேசத்துக்கு ஒரு சரியான பாடம் கற்பிக்கவேண்டும். அங்குள்ள ஹிந்துக்களை காப்பாற்றவேண்டும். 0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement