ஈரானில் தொடரும் போராட்டம்: பலி 2,571 ஆக அதிகரிப்பு
டெஹ்ரான்: ஈரானில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,571 ஆக அதிகரித்துள்ளது.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு பிரச்னை, அரசியல் அடக்குமுறை, கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக, கடந்த சில வாரங்களாக நாடு முழுதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கட்டுப் படுத்த, இணைய சேவை முடக்கம், ஊடக கட்டுப்பாடு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக, போராட்டங்கள் வன்முறையாக மாறி, பல நகரங்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன.
டிசம்பர் இறுதி வரை பலி எண்ணிக்கை 20 என்ற அளவில் இருந்தது. அதன் பின், படிப்படியாக உயர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் பலி எண்ணிக்கை, 50ஐ கடந்தது. தற்போதைய நிலவரப்படி உயிரிழப்புகள் மிகப்பெரிய அளவுக்கு உயர்ந்து 2,571 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 2,403 பேர் போராட்டக்காரர்கள் என்றும், 147 பேர் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள். பொதுமக்கள் 9 பேரும், குழந்தைகள் 12 பேரும் அடங்குவர். 18,100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
ஈரானில் இணையம் முடக்கப்பட்டிருப்பதால், வெளிநாட்டிலிருந்து ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிப்பது மிகவும் கடினமாகிவிட்டது. தற்போது நிகழ்ந்துள்ள உயிரிழப்பு எண்ணிக்கை, கடந்த பல ஆண்டுகளில் ஈரானில் நடந்த வேறு எந்தவொரு போராட்டங்களின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளை விடவும் மிக அதிகமாகும் என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த உயிரிழப்புகளுக்கு பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூடு காரணமில்லை, பயங்கரவாதிகள் மற்றும் கலவரக்காரர்கள் நடத்திய வன்முறையே காரணம்' என கமேனி அரசு அவர்கள் மேல் பழி போட்டுள்ளது. ''போராட்டக்காரர்களை ஈரான் தூக்கிலிடத் தொடங்கினால், அமெரிக்கா மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும். உதவி வந்து கொண்டிருக்கிறது'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். இதனால் போரட்டம் மேலும் தீவிரம் அடையும். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானை ஒரு ஹிஜாப் அணிந்த பெண் ஆள்வார் என்று ஒவைசி சொல்வானா?
இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு முன் ஒரு காலத்தில் மொத்த ஈரானும் பார்சி மதத்தவர்களின் சொந்தமாக இருந்தது. மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவும் அந்த மதத்தை சேர்ந்தவர்தான். மும்பையில் இன்னமும் பெரும் தொழில் செய்பவர்கள் அந்த மதத்தினர். அவர்களையெல்லாம் கொலை செய்தும், நாட்டை விட்டு விரட்டிவிட்டும் மூர்க்க கும்பல் மொத்த ஈரானையும் தங்கள் நாடாக மாற்றிக்கொண்டது. இளிச்சவாய இந்துக்கள் இருப்பதால் இந்த நிலை கூடிய விரைவில் இந்தியாவிலும் நடக்கும். இந்த மூர்க்க கூட்டத்தை ஆதரிக்கும் கட்டுமர திருட்டு திமுக, ஊழல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்குத்தான் இளிச்சவாய இந்துக்கள் டுமிழ்நாட்டில் ஓட்டு போடுறாங்க. விளங்கிடும் டுமிழ்நாட்டு இளிச்சவாய இந்துக்களின் எதிர்காலம்.
ஈரானுக்கு முந்தய பெயர் பாரசீகம் அதாவது பெர்சியா என்று இருந்தது. பார்சி மதத்தினர் இருந்ததால் அந்த பெயரை பெற்றது. இன்று கேரளாவில் அதிவேகம் வளரும் கட்சி முஸ்லீம் லீக்தான். மலப்புரம் மாவட்டத்தில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த அந்த கட்சி தற்போது கேரளாவின் அணைத்து மாவட்டங்களிலும் வளர்கிறது. நாளைடைவில் மாற்று மதத்தினர் இருக்கமுடியாது சூழ்நிலை ஏற்படலாம். தமிழர்களாகிய நாம் தமிழகத்தை இதுபோன்ற சூழ்நிலை ஏற்படுவதில் இருந்து காப்பாற்ற வேண்டும்மேலும்
-
வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்; முதல்வர் ஸ்டாலின்
-
பண்டிகை நாளில் குட்நியூஸ்; தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.480 சரிவு
-
திருவள்ளுவர் தின விழா விருதுகளை வழங்கினார் முதல்வர்
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்; ஆசிரியர் வீட்டுக்கு தீ வைத்து அட்டூழியம்
-
தமிழ் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு எடுத்துக்காட்டு திருவள்ளுவர்; பிரதமர் புகழாரம்
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் கட்ட நடவடிக்கை; காசா அமைதி வாரியம் அமைத்தார் அதிபர் டிரம்ப்