குழந்தை பெறும் வடமாநில பெண்கள்: தயாநிதி சர்ச்சை பேச்சு
சென்னை: ''வட மாநிலங்களில் பெண்கள் கல்வி கற்கக் கூடாது; வீட்டிலேயே இருக்க வேண்டும்; குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர்,'' என, தி.மு.க., - எம்.பி., தயாநிதி பேசினார்.
'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தின் கீழ், சென்னை காயிதே மில்லத் கல்லுாரியில், மாணவியருக்கு 'லேப்டாப்' வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. இதில், மத்திய சென்னை எம்.பி., தயாநிதி பேசியதாவது:
நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. சிறந்த முதல்வராக ஸ்டாலின் உள்ளார். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
மேற்படிப்பு படிக்க செல்லும் தமிழக பெண்கள் கெத்தாக இருக்க வேண்டும் என்பதற்காக, இலவசமாக லேப்டாப் வழங்கியுள்ளனர். ஆனால், வட மாநிலங்களில் பெண்கள் கல்வி கற்க கூடாது என்கின்றனர். வீட்டிலேயே அடுப்படியில் இருக்க வேண்டும்; குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தயாநிதியின் இந்தப் பேச்சை அடுத்து, 'வடமாநில பெண்கள் குறித்து அவதுாறாக பேசியதாக, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான். ஆனால் சிறந்த முதல்வர் ஸ்டாலின் அல்ல..
காலா காலமாக கட்சியில் இருந்தும் நேற்று வந்தவருக்கு சொம்பு தூக்குவதை பற்றி இந்தாளின் கருத்து என்ன. டாஸ்மாக் ஒன்றை தவிர வேறு என்ன சாதனை செய்து விட்டீர்கள். எல்லோரும் குடித்துவிட்டு ரகளை செய்கின்றனர். வடநாட்டவர் இல்லையென்றால் ஒரு வேலையும் நடக்காது.
அறிவு இல்லாதவர் என்ன டேட்டா உன்னிடம் இருக்கு உன்னை ஜெயிக்க வைக்கும் மக்கள் மத்திய சென்னை வாசிகளிடம் தான் தவறு உள்ளது
This man never learns. Habitual offender. North Indian bias runs in his blood.
ஓஹோ ஓஹோ
போன எலக்சன்ல ஓட்டு கிட்ட வந்தாரு அவர்தான் இவரா
மமதா, மாயாவதி, வசுந்தராதேவி, மெஹபூபா, சுசேதா, ஆனந்திபென் போன்ற பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வட இந்திய மாநிலங்களில் முதல்வராக இருந்துள்ளனர். சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பலர் முக்கிய அமைச்சர் பதவி வகித்துள்ளனர். பல வட இந்திய பெண் IAS, IPS அதிகாரிகள் தலைமைச் செயலாளர், DGP பதவிகளைக் கூட வகித்துள்ளனர். ஆனால் உங்கள் திமுக ஒரு பெண் முதல்வரை தேர்ந்தெடுக்க வாய்ப்பேயில்லை. முக்கிய இலாகா கூட கொடுப்பதில்லை. அதிக கல்வியறிவு பெற்ற கேரளா,ஆந்திரா, கர்நாடகாவிலும் இதே நிலைதான். வடக்கு வாழ்கிறது. தெற்கு திராவிஷத்தால் தேய்க்கப்படுகிறது. ஆக இது தயாவின் இன்னொரு உளறல்.
இதை ஹிந்தியில் டப் செய்து ஓரத்தில் இண்டி கூட்டணி என்று பெயரிட்டு வட மாநிலங்களில் பரவச்செய்யுங்கள் ....
காசு மட்டும் இருந்தாலும், பெரும் படிப்பே இருந்தாலும் சிலவற்றை மாற்ற முடியாது.
எதை வேண்டுமானாலும் பேசலாம். இவன் ஒரு ஊழல் வாதி. இவன் சொல்லும் கருத்தை முஸ்லீம் பெண்களுடன் ஒப்பிட்டு பேச முடியமா. தமிழ் நாட்டின் அவல நிலை . என்று மாறுமோ. 2026 ஒன்று தான் வழிமேலும்
-
மும்பை மாநகராட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடக்கம்; பா.ஜ., கூட்டணி முன்னிலை!
-
வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்; முதல்வர் ஸ்டாலின்
-
பண்டிகை நாளில் குட்நியூஸ்; தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.480 சரிவு
-
திருவள்ளுவர் தின விழா விருதுகளை வழங்கினார் முதல்வர்
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்; ஆசிரியர் வீட்டுக்கு தீ வைத்து அட்டூழியம்
-
தமிழ் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு எடுத்துக்காட்டு திருவள்ளுவர்; பிரதமர் புகழாரம்