சத்தீஸ்கரில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; இன்று நக்சலைட்டுகள் 52 பேர் சரண்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 15) நக்சலைட்டுகள் 52 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு போலீசாரிடம் சரண் அடைந்தனர்.
சத்தீஸ்கரின் தண்டேவாடா, சுக்மா மாவட்டங்களில் செயல்பட்டு வந்த நக்சல்களை ஒழிக்கும் பணியில், மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் நக்சலைட்டுகள் சரண் அடையும் நிகழ்வு நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று (ஜனவரி 15) பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 52 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு போலீசாரிடம் சரண் அடைந்தனர். இவர்களில் 49 பேருக்கு ரூ.1.41 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜனவரி 8ல், தண்டேவாடா மாவட்டத்தில் 63 நக்சல்கள் சரணடைந்தனர். இதேபோல் சுக்மா மாவட்டத்தில் ஜன., 7ல், 26 நக்சல்கள் சரணடைந்தனர். நேற்று (ஜனவரி 14) சுக்மா மாவட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த நக்சல்கள் 29 பேர், நேற்று போலீசில் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னி தீவு கதை மாதிரி நீண்டு கொண்டே போகிறதே.. அமீத் ஷா கெடு நெருங்குதே.
இப்படி சரண் அடைந்தவர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே வந்தால் விரைவில் அம்மாநில மக்கட்தொகையை கடந்து விடும்போல தெரிகிறது.மேலும்
-
குரோக் ஏஐ.,யில் மாற்றம்: புகைப்படங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தது எக்ஸ்!
-
அமெரிக்கா வரி விதிப்பால் ஈரானுக்கு இந்திய நிறுவனம் ஏற்றுமதி செய்ய முடியாது: சசி தரூர் கவலை
-
செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் தேக்கம்;உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் முறையீடு
-
இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்த நியூசிலாந்து * கவாஸ்கர் வியப்பு
-
பைனலில் விதர்பா அணி * விஜய் ஹசாரே டிராபி தொடரில்
-
இளம் இந்தியா அபார வெற்றி * யூத் உலக கோப்பை போட்டியில்