நெற்குப்பை பாரம்பரிய வீட்டில் பொங்கல் விழா; 27 குடும்பங்கள் பங்கேற்பு
திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே நெற்குப்பையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய பூர்வீக வீட்டை ராம.சா.ராமநாதன் செட்டியார் - -உண்ணாமலை ஆச்சி குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். குடும்ப விழாக்களை இங்கு கொண்டாடி வருகின்றனர். பொங்கல் விழாவில் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டு 27 குடும்பங்களைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கொண்டாடினர். இதற்காக அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும், ஹரியானா, மும்பை, பெங்களூர், கோவை, திருச்சி, சென்னை நகரங்களில் இருந்தும் 3 நாட்களுக்கு முன் இங்கு வந்திருந்தனர்.
முதல் நாளில் நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன், கொல்லங்குடி வெட்டுடையார் காளியை வழிபட்டனர். தை பொங்கலான நேற்று பாரம்பரிய வீட்டில் அனைவரும் ஒரே வண்ணத்தில் வேட்டி, சட்டை, சேலை அணிந்து கூடினர். வீட்டு முற்றத்தில் வண்ண கோலமிட்டு, சூரியக் கதிர்கள் இறங்குமிடத்தில் பெண்கள் விறகு அடுப்பில், பச்சரிசி மாவு கோலமிட்ட பானைகளை வைத்தனர்.
தொடர்ந்து வயல்களில் அறுவடை மூலம் வந்த அரிசியை பானையிலிட்டு பொங்கலிட்டனர். பால் பொங்குகையில் மங்களகரமாக சங்கு முழங்க, குலவையிட்டு, மற்றவர்கள் பொங்கலோ பொங்கல் என்று சூரியபகவானை வழிபட்டனர்.
பின்னர் மூத்தோரிடம் ஆசி பெற்றும், பாரம்பரிய விளையாட்டுக்களான கயிறு இழுத்தல், பாண்டியாடுதல், தாயம்,பல்லாங்குழி விளையாடி மகிழ்ந்தனர்.
கோவை ஏ.ஆர். லட்சுமணன் செட்டியார், சென்னை கேஆர்.என்.சாத்தப்பன் செட்டியார் கூறியதாவது:
உழவர்களுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் பொங்கலை சொந்த ஊரில், பாரம்பரிய வீட்டில் கொண்டாட 9 ஆண்டுகளுக்கு முன் முடிவெடுத்தோம். அது உற்சாகமான, எங்களை புதுப்பிக்கும் அனுபவத்தை ஆண்டு தோறும் தருகிறது என்றனர்.
தமிழகத்தின் பாரம்பரியத்தை கட்டிக் காப்பது மக்கள்தான். திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு முதல் குடும்பம் கேட்டரிங் பொங்கலுக்குத்தான் லாயக்கு.மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!