முனியப்பன் கோவிலில் 140ம் ஆண்டு திருவிழா
சேலம்: சேலம், அஸ்தம்பட்டி ரவுண்டானாவில், மத்திய சிறை போலீசார் குடியிருப்பு வளாகத்தில் உள்ள, சிறை முனிப்பன் கோவிலில், 140ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றம், கண் திறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு, முனியப்ப சுவாமி பதியில் இருந்து, பால்-குடம், சக்தி அழைத்தல் ஊர்வலம், மேள தாளம் முழங்க நடந்-தது.
தொடர்ந்து முனியப்பனுக்கு பால் அபிேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்துடன் ஆண்டு திருவிழா பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள், ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து முனீஸ்வரரை வழிபட்டனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்-டது. இரவு சத்தாபரண ஊர்வலம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!
Advertisement
Advertisement