எல்.கே. துளசிராம் பிறந்த தினவிழா
மதுரை: மதுரை சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுதலைப் போராட்ட வீரரான எல்.கே. துளசிராம் 156வது பிறந்ததின விழா நடந்தது.
அவ்ராம் அமி அறக்கட்டளை நிறுவனர் தேவராஜ் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.
துளசிராமின் பன்முக ஆளுமை எனும் தலைப்பில் காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் பேசுகையில்,'' மதுரை நகராட்சியின் தலைவராக இரண்டு முறை இருந்தார். ஜி.டி. நாயுடு உடன் இணைந்து தென் தமிழகத்தின் தொழில் புரட்சிக்கு வித்திட்டவர். வழக்கறிஞர், சிறந்த பேச்சாளர், சமூக சிந்தனையாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர்'' என்றார்.
கல்வியில் சிறந்த மாணவன் விஷ்ணுவரதனுக்கு உதவித்தொகை ரூ.4000 வழங்கப்பட்டது. எழுத்தாளர் சாமி, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரங்கன், தேசிய ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தலைவர் ஞானேஸ்வரன், ஓய்வு பெற்ற வணிகவரி உதவி கமிஷனர் கோபால், சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் தினேஷ் கலந்து கொண்டனர்.
உறுப்பினர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!