அதிபர் டிரம்பிடம் நோபல் பரிசை கொடுத்துவிட்டேன்; வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ அறிவிப்பு
வாஷிங்டன்: வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனது அமைதிக்கான நோபல் பரிசுப் பதக்கத்தை அதிபர் டிரம்பிடம் வழங்கியதாகக் கூறினார்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்பட்டு, நான் எட்டு போர்களை நிறுத்திவிட்டேன் என்று அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்தாலும், 2025ம் ஆண்டுக்கான பரிசு அவருக்கு வழங்கப்படவில்லை. இருந்தாலும் அமைதிக்கான நோபல் பரிசு குறித்து டிரம்ப் தொடர்ந்து புலம்பி வருகிறார்.
இதற்கிடையே, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படையினரால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ, 'எனக்கு கிடைத்த நோபல் பரிசை டிரம்புடன் பகிர்ந்து கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
மச்சாடோவின் கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்தது. நோபல் பரிசு ஒருவருக்கு வழங்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் அது அவருடையதுதான் என நோபல் அமைப்பு திட்டவட்டமாக கூறியிருந்தது.
இந்நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்தார். அவருக்கு தனக்கு வழங்கப்பட்டிருந்த அமைதிக்கான நோபல் பரிசை வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், டிரம்பிற்கு தனது பரிசை வழங்கியதாக மச்சாடோ தெரிவித்தார். மேலும், அவர் இது நமது சுதந்திரத்திற்கான அவரது தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும். நாங்கள் அதிபர் டிரம்பை நம்பலாம்" என தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை அறிவிப்பு
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிபர் டிரம்ப் வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவை ஓவல் அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அவர் அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை அங்கீகாரமாகவும், கவுரவமாகவும் வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@block_Y@
இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவைச் சந்தித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். அவர் பலவற்றைக் கடந்து வந்த ஒரு அற்புதமான பெண்மணி. நான் செய்த பணிக்காக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். பரஸ்பர மரியாதையின் அற்புதமான செயல். நன்றி மரியா. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார். block_Y
வெக்கம் இல்லாமல் சும்மா கொடுத்த நோபல் பரிசையும் வாங்கி கொண்டார் டிரம்ப் . உலக மஹா கேவலம் இது
அமைதிக்கான நோபல் என்பது நாட்டு பற்றே இல்லாமல் சொந்த நாட்டை விற்பனை செய்பவர்களுக்கு மேற்கு உலக நாடுகளால் கொடுக்க படுவது...... புரிந்தால் சரி
அதை ஏற்றுக்கொண்டால் உலகமஹா கேவலம்.
வட அமெரிக்காவின் டாப்பு டக்கரு இவர் தான் போலிருக்கு...
நோபல் பரிசை கொடுத்து வெனிசுல அதிபர் பதவியை எதிர்பார்த்து இருக்கிறார். ஆனால் ட்ரம்பின் நடவடிக்கை என்பது அவருக்கே தெரியாது.
நோபல் பரிசை கொடுத்து வெனிசுல அதிபர் பதவியை எதிர்பார்த்து இருக்கிறார். ஆனால் ட்ரம்பின் நடவடிக்கை என்பது அவருக்கே தெரியாது.
ஸ்கூல் பசங்க வேற யாருக்காவது பரிசு குடுத்துட்டாங்கன்னா , அழுது , விழுந்து, மண்ணுல புரண்டு அடம்பிடிச்சு அவங்க கிட்ட இருந்து புடுங்கி குடுக்கற வரைக்கும் அழுகையை நிறுத்தமாட்டாங்க... மெரிட்ல ஜெயிச்சு வாங்குவதுதான் பரிசு.. இந்த மாதிரி புடிங்கி வாங்கறது சின்னப்புள்ளைதனம்... வயசாக ஆக ஆக எல்லோருக்கும் பக்குவம் வரும் / வரணும் ...
விற்பதாக இருந்தால் நல்ல விலைக்கு வாங்க ஸ்டாலின் தயார் .
தனது சொந்த நாட்டின் அதிபரைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டதற்காக நோபல் பரிசை கொடுத்து இருக்கிறார்.. இவருக்கு நோபல் பரிசு கொடுத்ததற்காக நோபல் ஒருங்கிணைப்பு கண்டிப்பாக வருத்தப்பட வேண்டும்..
இனி வரும் காலங்களில் இவரைப் போன்றவர்களுக்கு நோபல் பரிசு கொடுத்து அதன் கௌரவரத்தை கெடுக்காமல் இருக்க வேண்டும்..
கொடுத்தவர் கேவலமானவர், அதை வாங்கியவர் மஹா கேவலமானவர், அதுவும் ஒரு வல்லரசு நாட்டு ஜனாதிபதி. பரிசைதான் கொடுக்கலாம், ஆனால் கொடுக்கப்பட்ட சான்றிதழை மாற்றமுடியுமா? என்ம்மா உருட்டுற நீங்க, உங்களுக்கு பரிசு தந்தத்துக்கு வெட்கப்படணும். இப்படி கொடுத்ததால் டிரம்ப்இக்கு அது சொந்தமாகாது.மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!