தை 2ம் தேதி பொங்கல் விழாவைக் கொண்டாடும் கிராம மக்கள்
மயிலாடுதுறை: சீர்காழி அருகே நான்காவது தலைமுறையாக தை 2ம் தேதியான இன்று பொங்கல் விழாவை கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருநகரி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தை மாத பிறப்புக்கு முதல் நாள் ஏற்பட்ட கலவரம், அதனை ஒட்டி நடந்த நகை மாயமான சம்பவம் தொடர்பாக ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து ஸ்டேஷனிற்கு கொண்டு வைத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை என்பதால் போலீசார் மனிதாபிமான அடிப்படையில் திருநகரி கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தினரின் ஜாமினோடு, அவர்களை தை 2ம் தேதி விடுவித்துள்ளனர். அன்று முதல் அக்கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தை 2ம் தேதி பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர்.
இதனை மாற்றி தை 1ம் தேதி பொங்கலிட்டால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதால் வழக்கத்திற்கு மாறாக தை 2ம் தேதியிலேயே பொங்கல் விழாவாக கடந்த நான்கு தலைமுறைகளாக கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தை மாதம் 2ம் தேதியான இன்று (ஜன.,16) திருநகரி கிராம மக்கள் குடும்பமாக தங்கள் வீடுகளின் முன்பு விளக்கேற்றி, கரும்புடன் பொங்கல் வைத்து வழிபட்டனர். சூரிய பகவானுக்கு படையல் இட்டு மகிழ்ந்தனர்.
மேலும்
-
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!
-
சூதாட்ட இணையதள பக்கங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி
-
எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் அரசியலை முறியடித்த மும்பை மக்கள்: அண்ணாமலை
-
வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையின் தாக்கமே மஹா. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்; மத்திய அரசு
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு