எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
அதிமுகவைத் தொடங்கிய பின்னர், அதனை வெற்றிக் கட்சியாக்க... வெற்றிடத்தை வெற்றி இடமாக்க தமிழக முழுவதும் எம்ஜிஆர் சூறாவளிச் சுற்றுப்பயணம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். எம்ஜிஆரின் அந்த சுற்றுப்பயணத்தின் போது, கருணாநிதி ஆட்சி. கருணாநிதியை எதிர்த்துத் தான் தன் கட்சியை எம்ஜிஆர் வார்த்தெடுத்து வழி நடத்திக் கொண்டிருந்தார். எம்ஜிஆரின் சுற்றுப்பயணத்திற்குப் போதிய அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை.
இது எம்ஜிஆருக்கும், அவரின் ஆத்மார்த்தமான தொண்டர்களுக்கும் இடையே மிகுந்த வசதியாகப் போய்விட்டது. 'ரோடு ஷோ' என்ற வகையில், திறந்த ஜீப்பில் நின்றவாறு, மக்கள் வெள்ளத்தில் எம்ஜிஆரின் வாகனம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. எம்ஜிஆர் தன்னைச் சூழ்ந்து வந்த ஒவ்வொரு தொண்டரையும் பார்த்துக் கையசைப்பது, கைக்குலுக்குவது, குழந்தைகளைக் கண்டால் தூக்கி வைத்துக் கொஞ்சுவது, அருகில் இருந்தால் கட்டி அணைப்பது, ஆனந்த கண்ணீர் வடிக்கும் மூதாட்டிகளை நெருங்க வைத்துக் கண்ணீர் துடைப்பது என்றவாறு, எம்ஜிஆரின் அனைத்து அணுகுமுறைகளும் தமிழக அரசியலில் ஒரு புதிய அனுபவத்தை அறிமுகம் செய்திருந்தன.
இவ்வாறாக சேலத்திற்கு பிரச்சாரம் செய்யச் சென்றிருந்த எம்ஜிஆர், அங்கே பஸ் ஸ்டேண்ட் அருகே ஓரியண்டல் தியேட்டருக்குப் பக்கத்தில் திறந்த ஜீப்பில் பவனி வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு தொண்டர் எம்ஜிஆர் பயணித்த வாகனத்தின் குறுக்கே படுத்து விட்டார்.
அப்போது எம்ஜிஆரைச் சுற்றிச் சூழ்ந்து நின்று இருந்த எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர்கள் அங்கே ஓடிச் சென்றார்கள். வாகனத்தின் குறுக்கே படுத்துக் கிடந்த அந்த இளைஞரைக் குண்டுகட்டாகத் தூக்கினார்கள்.
எம்ஜிஆரோ, 'அந்த இளைஞரை என் அருகில் கொண்டு வாருங்கள்' என்று கூறினார். " வண்டியின் குறுக்கே ஏன் படுத்தாய்? உனக்கு என்ன வேண்டும்? " என்று அந்த வாலிபரை அருகில் அழைத்துக் கேட்டார்.
அந்த இளைஞரோ, "வாத்யாரே..! இந்த உசுரு ஒனக்குத்தான். நீ ஜெயிக்கணும். இதுக்கு என் உசுரு காணிக்க" என்றவாறு கதறிக் கதறி அழத் தொடங்கினார். எம்ஜிஆரோ அந்த இளைஞரைக் கட்டித் தழுவினார். கண்ணீரைத் துடைத்தார். தன் ஜிப்பாயிலிருந்து பணத்தை எடுத்து, அந்த வாலிபரின் பாக்கெட்டில் திணித்தார்.
" உன் வாக்கு பலிக்கும். நீ ஜெயிப்ப. அதனால நானும் ஜெயிப்பேன்" என்று எம்ஜிஆர் கூறினார். சுற்றிச் சுழன்று நின்றிருந்த தொண்டர்கள் பலத்த கரவொலியும், குரலொலியும் எழுப்பி, அந்த இடத்தையே உணர்ச்சிப் பிழம்பாக்கினர். ஓரியண்டல் தியேட்டரின் சுற்றுச்சுவரில் நின்றபடி, இந்த காட்சிகளை வேடிக்கைப் பார்த்த அடியேனின் நெஞ்சில், இவை அவ்வப்போது நிழலாடிக் கொண்டே இருக்கின்றன.
ஒரு வழியாக எம்ஜிஆரின் வாகனம் அடுத்த பிரச்சார முகாமை நோக்கி நகர்ந்து விட்டது. எம்ஜிஆர் கட்டித் தழுவிய அந்த வாலிபர் திடீர் விஐபி ஆகிவிட்டார். அங்கே சூழ்ந்து இருந்த ஒவ்வொருவரும் வந்து அந்த வாலிபரை கட்டி தழுவ வந்தனர். அவரோ, " இது வாத்தியார் கட்டித் தழுவிய சட்டை. இனிமேல் நான் கும்புட்ற சட்டை " என்றவாறு கைகளை மட்டும் கொடுத்தார். மற்ற தொண்டர்கள் அவரைக் கைகுலுக்கிப் பாராட்டுவதுமாக மகிழ்ச்சிக் குதூகலிப்பில் கொண்டாடினர்.
கிச்சிப்பாளையத்தை வசிப்பிடமாகக் கொண்ட அந்த வாலிபர், எம்ஜிஆர் கட்டிப்பிடித்த போது கசங்கிய சட்டையை, அப்படியே எடுத்துத் தன் குடிசை வீட்டில் காட்சிப் பொருளாக வைத்து விட்டார். தினந்தோறும் அந்த சட்டையைக் கும்பிடுவதையும் அவர் வழக்கமாக்கி வைத்திருந்தார்.
ஆனால் அந்தோ... அடுத்த சில மாதங்களில் பெய்த திடீர் அடைமழையின் காரணமாக, அந்த குடிசையில் மழை வெள்ளமும் குடி புகுந்து, குடிசையே குலைந்து போனது. காலங்கள் கரைந்து போயின. 50 ஆண்டுகளைத் தாண்டிய பிறகும், அந்த நினைவுகளைச் சுமந்த நெஞ்சம் அவ்வப்போது விம்மி தாழ்வது வழக்கமாகிப் போனது.
- ஆர் நூருல்லா செய்தியாளன்,
9655578786
எதனை ஸ்டாலின் வந்தாலும் தலைவர் கிட்ட வர முடியாது கருணாநிதி ஏ 13 வருஷம் தவம் கிடடந்து தான் வர முடிந்தது , ஆமாம் என்ன பெரிய நல திட்டம் நடந்தது பாக்கெட் நிரம்பியது அவ்லவுதான் எந்த கொம்பண்ணும் தலைவருக்கு அப்பேரும்தான்
கல்லூரியில் படிக்கும் போது அவரை ஆற்காடு சாலை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் அலுவலகத்தில் எங்கள் மாணவர்களோடு சந்தித்து மாலை அணிவித்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் 1972 ல் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்றும் பத்திரமாக இருக்கிறது..... என்றும் வாழ்க பல்லாண்டு
இன்றைய காலகட்டத்தில் MGR JAYA இருந்திருந்தாலும் DMK செய்த நல திட்டங்களால் ஸ்டாலினை வெற்றி கொள்ளுவது சாத்தியமில்லை
தற்போதைய முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் சில பல நல்லதை செய்திருக்கலாம் - ஆனால் அது போலவே அ தி மு க வும் செய்து தோற்றிருக்கிறது குறிப்பாக 1996. 1991-96 வரை ஒரு மேம்பாலமும் கட்டப்படவில்லை என்பது தி மு கா வின் வாதம் ஆனால் , சென்னை தாம்பரம் இரும்புலியூர் - சென்னை புறநகர் சாலை துவங்கும் இடத்தில் 1994இல் இரயில் மேம்பாலத்துடன் கட்டப்பட்டது மேலும் அப்பொழுதே சென்னையிலி ருந்து மேல் மருவத்தூர் வரை நான்கு வழிச்சாலை, செங்கல்பட்டு புறவழிச்சாலை மேம்பாலம் உட்பட கிட்டத்தட்ட 90 km கட்டிமுடிக்கப்பட்டது. அப்பொழுது சுங்க கட்டணம் வசூழிக்கப்படவில்லை
மெட்ரோ விற்கு முன்னோடி MRTS இன் முதல் பகுதி 1995ல் துவங்கப்பட்டது. அத்திட்டத்தை கிடப்பில் போட்டுத்தான்மெட்ரோ .
தெற்காசிய விளையாட்டு அரங்கங்கள் என பல செய்தும் - தோல்வியே காரணம் மீடியாவின் நடுநிலை இன்மை அல்லது அறியாமை ஒரு திருமண புகைப்படத்தை பூதாகரமாக்கி மக்களை குழப்பியது விதி என்பது.
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்.. 200 வாங்கிக்கொண்டு 200000000 ரூபாய்க்கு கூவுவார்கள் எதுடா நலத்தொண்டு ?? எல்லா சிறுவர் கைகளிலும் கஞ்சா / பெண்கள் பாதுகாப்பு? / / திமுக குண்டர்கல் அட்டூழியம் உச்சம் / நகை பறிப்பு / நிலா அபகரிப்பு / கள்ள சாராய விற்பனை + சாவுகள் / சட்டம் ஒழுங்கு கிலோ என்ன விலை ? இந்த லட்சணத்துல நொலத்திட்டம் மூலமா எம்ஜிஆரை ஜெயிப்பாராம்.. போயி மெரினாவில் ஓய்வெடுக்குறவர்கிட்ட கேளு வருஷம் எப்டி கதரவிட்டார்னு வாங்குற காசுக்கு கூவுங்கப்பா. எதுக்கு எக்ஸ்டரா ? என்ன கூவுனாலும் அவனுவ 200 க்கு மேல சல்லிக்காசு தரமாட்டானுவ
M. G. R தான் உண்மையான ஆன்மீக வாதி மக்களுக்கு நல்லதையே திரைப்படத்தில் சொன்னார், தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடைபிடித்து வாழ்ந்து காட்டினார், தமிழ் நாட்டின் தெய்வமானர். M. G. R. போற்றி போற்றி போற்றி.
தூத்துக்குடியில் என் நம்பர் ஒருவர் பொன்மன செம்மல் அவர்களை சென்னை ராமாவரம் தோட்டத்தில் சந்தித்து ஆசிபெற சென்றார் - எம்ஜியார் அவரை கடிந்துகொண்டார் - என்னைபார்க்க இவ்வளவு தூரம் கடந்து வந்துஇருக்கியே - கடன் வாங்கித்தான் வந்து இருக்கிறார் இல்லையா - இனி இப்படி செய்யாதே என்று சொல்லி ஒரு நூறு ரூபாயை அவர் சட்டைப்பையில் வைத்தார் - இன்னும் ஒரு கட்டு பணம் அவரது உதவியாளர் மூலம் அவரிடம் கொடுத்தார், உன்குடும்பத்துக்கு ஏதாவது வாங்கிச்செல் என்றார் - எம்ஜியார் கொடுத்த அந்த நூறுரூபாய் பிரேம் போடப்பட்டு பூமாலையுடன் இன்னும் அந்த நண்பர் வீட்டில் தொங்குகிறது - உண்மையிலே கலியுக கர்ணன் எம்ஜியார் என்றால் அது மிகை இல்லை
இளவல் "நிதி"களை வணங்கும் இருநூறு நீ
திராவிட கொடுமைகளில் இருந்து மக்களை காத்தவர் தொடர்ந்து காப்பாற்ற தனக்கு பின் அம்மாவை உருவாக்கி இன்று வரை காத்து கொண்டிருப்பவர் பொன்மன செம்மல் என்று வாரியார் சுவாமிகளால் புகழாரம் சூட்ட பட்டவர் MGR அவர்கள் அவர் என்றும் தனக்கோ தன குடும்பத்துக் க்காகவோ எதுவும் சேர்த்தது இல்லை
எப்பிறவியுலும் காண முடியாத
மாமனிதர்
செய்தி வெளியிட்ட மலருக்கும்
நிருபர்க்கும் எண் உளமார்ந்த
வணக்கம் பலகோடி
தனிநபர் துதி நாட்டில் ஜனநாயகத்தை அழிக்கிறது. எல்லாக் கட்சிகளும் மாறவேண்டும். ஒரு கட்டத்தில் துதிக்கப்படும் தலைவர்களையே அழித்துவிடும். இந்தியாதான் இந்திரா. இந்திராதான் இந்தியா என்று காங்கிரசின் தலைவர் DK பரூவா பேசியதைக் கேட்டு இந்திரா அகமகிழ்ந்தார். அடுத்த தேர்தலில் அவரும் மகனும் படுதோல்வியடைந்தனர்.
எஸ் அதே தான் உங்கள் மோடிக்கும் இதே நிலை வரும் விரைவில்
அதிமுகவுக்கு நல்ல தலைமை கொண்டு வாங்க
அட ஆகுயரா.. எதையும் நல்லா படிச்சு கருத்து போடமாட்டியா ?? இந்திராவை துதி பாடி சொன்னது காங்கிரஸ் தலீவரு.. மோடியை பாராட்டி சொல்வது இந்திய பொது மக்கள்.. இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியல - வாழ்நாள் அடிமை உப்பியாக இருக்க உனக்கு முழு தகுதி இருக்குப்பா
மாபெரும் தன்னிகரில்லா தலைவர்.
என்றென்றும் மக்கள் மனதில் நிலைபெற்ற தலைவர்.
அவர் புகழ் வாழ்க.மேலும்
-
பிரச்னையை சுட்டிக்காட்டுவதோடு தீர்வையும் சொல்கிறது 'தினமலர்'
-
இயற்கை வைரம் மட்டுமே இனி வைரம் பி.ஐ.எஸ்., தர நிர்ணய அமைப்பு உத்தரவு
-
தேசியம் : தலைவர்கள் பேட்டி
-
சத்தீஸ்கரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொலை
-
தெருநாய் துரத்தியதால் விபரீதம் சுவரில் மோதி வாகன ஓட்டி பலி
-
இந்துார் உயிரிழப்பு விவகாரத்தில் அரசியல் செய்கிறார் ராகுல்: டில்லியில் பா.ஜ., பாய்ச்சல்