இந்துார் உயிரிழப்பு விவகாரத்தில் அரசியல் செய்கிறார் ராகுல்: டில்லியில் பா.ஜ., பாய்ச்சல்
'மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல், பொறுப்பு மிக்க அரசியலமைப்பு சட்டப் பதவியில் இருப்பதை மறந்துவிட்டு, சராசரி அரசியல்வாதியைப் போல நடந்து கொள்கிறார்' என, பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது.
ஆறுதல்
மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில், பகிரத்புரா பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து பலர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், அந்தப் பகுதிக்கு நேரில் செ ன்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசிய அவர், இந்த சம்பவத்திற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், உரிய இழப்பீடும், மருத்துவ செலவுக்கான உதவியும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குழப்பம்
இந்நிலையில், நேற்று டில்லியில் பா.ஜ., மூத்த தலைவர் ஷா நவாஸ் உசேன் கூறியதாவது:
இந்துார் சம்பவத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அவை அனைத்தையும் அரசு ஏற்கனவே எடுத்துவிட்டது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் ஒவ்வொருவர் மீதும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது.
இது மிகவும் தீவிரமான விவகாரம். ஆனால், காங்., மூத்த எம்.பி., ராகுல், இந்த சம்பவத்தில் முழுக்க முழுக்க அரசியல் செய்ய விரும்புகிறார்; முடிந்தவரை குழப்பம் ஏற்படுத்த விரும்புகிறார்.
அரசியலமைப்பின் பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் அவர் அதை மறந்துவிட்டு, சராசரி அரசியல்வாதியைப் போல இந்த விஷயத்தை கையாள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டாக தான் இந்த மாதிரி பிரச்சனைகளில் நாடு முழுவதும் ஊழல் செய்கிறார்கள். அதில் காங்கிரஸ் அரசுகளும் அடக்கம். அரசியல்வாதிகளுக்கு, அரசு அதிகாரிகளுக்கு மக்களின் உயிர் மேல் அவ்வளவு அக்கறை.
ராகுல்ஜி இன்றுவரை உங்களின் ஆதரவு நாடான வங்கதேசத்தில் நடக்கும் இனப்படுகொலையை கண்டிக்க கூட இல்லையே
சென்னை மெட்ரோ நீரை பரிசோதிக்கt வார்டுக்கு ஒரு பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் ..ஆதம்பாக்கம் பகுதியில் தரையிலிருந்து ஆறடிக்கு கீழே தான் பைப் கனெக்ஷன் இருக்கிறது ..தண்ணீர் துர்நாற்றத்துடன் வருகிறது ..கேன் வாட்டர் வாங்காத வீடுகளே இல்லை ..கடைகளில் சட்னி அரைக்க இட்லி தோசை மாவுகளை அரைக்க எந்த நீரை பயன்படுத்துகிறார்கள் என்று பயமாக இருக்கிறது
அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள். நீங்கள் செய்வதும் அரசியல்தான்
குடிநீர் விநியோகம் அடிப்படையான விஷயம். அதைக்கூட சரியாக செய்ய முடியவில்லை என்றால் ஒருவரும் தங்கள் கடமையை சரியாக செய்யவில்லை என்பதையே காட்டுகிறது.
இந்த காங்கிரஸ் இளவரசர் ராகுல்காந்தி இந்தூர் விவகாரத்தில் மட்டுமா அரசியல் செய்கிறார்?
நம் நாட்டுக்கு எந்தெந்த வகையில் துரோகம் இழைத்து நாட்டை சீர்குலைக்க வேண்டுமோ அத்தனை வழிகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நம்முடைய பாரதப் பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த இந்த UPI பண பரிவர்த்தனை உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக IMF என்கிற உலக வங்கி இந்தியாவில் இந்த UPI பேமெண்ட் மூலம் அதிகமான பண பரிவர்த்தனைகள் நடக்கிறது என்று நம்மை பாராட்டியது. இதை பல நாடுகள் வரவேற்று தங்கள் நாட்டிலும் இதே போன்று UPI பரிவர்த்தனை முறையை கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.இந்த ஒன்று போதாதா காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பாக ராகுல்காந்தியின் பொறாமை மற்றும் வயித்தெரிச்சலுக்கு இந்த UPI திட்டத்தை எப்படியாவது கெடுத்து குட்டிச்சுவராக்கி கெட்ட பெயரை ஏற்படுத்தி இந்தியாவிலும்,
மற்ற நாடுகளிலும்
இதை வரவிடாமல் செய்ய வேண்டும் என்ற பல வழிகளில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் முதல் கட்டமாக காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருந்து நடைமுறை படுத்தி வருகிறார். முதலில் சித்தராமைய்யா ஆட்சி செய்யும் கர்நாடகாவில் இருந்து இந்த UPI திட்டத்தை தோல்வியுற செய்யும் நோக்கத்தோடு அங்குள்ள மொபைல் போன் கடைகள், நடைபாதை தள்ளு வண்டி சிற்றுண்டி கடைகள், காய்கறி கடைகள் உட்பட மற்றும் பெரும் வணிக வளாகம் உள்ளிட்ட ஹோல்சேல் கடைகளின் முதலாளிகளிடம் நீங்கள் விற்கும் பொருட்களுக்கு
QR கோர்டு மூலமாக UPI பேமெண்டில் பணம் வாங்கினால் உங்களுக்கு மத்திய அரசு GST வரியை பிடித்தம் செய்கிறது. அதனால் வருடத்திற்கு லட்சக் கணக்கில் நீங்கள் அரசுக்கு பணம் கட்ட வேண்டியது இருக்கும் மேலும் இதுவரை வருமானவரியே கட்டாத நீங்கள் இனிமேல் வருடத்திற்கு ஆயிரக் கணக்கில் Income Tax கட்ட வேண்டியதிருக்கும்
என்று நோட்டீஸை அச்சடித்து கொடுத்து விட்டது கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் சித்தராமையாவின் காங்கிரஸ் அரசு. எனவே UPI மூலமாக பணத்தை பெறாதீர்கள் கையில் காசு வாங்கி கொண்டு பொருட்களை விற்பனை செய்யுங்கள் என்று கர்நாடக அரசே இந்த பீதியை கிளப்பி
விட்டது. இதன் விளைவாக பெங்களூரில் உள்ள பெரும்பாலான கடைகளில் QR கோடு பலகையில் குறுக்கும் நெடுக்குமாக சிகப்பு கோடுகளுடன் பெரிய பெருக்கள் குறிகளை போட்டு இங்கு UPI பேமெண்ட் கிடையாது வாடிக்கையாளர்கள் பணமாக கொடுக்கவும் என்று போர்டில் எழுதி வைத்து இருக்கிறார்கள். இதை நான் இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்ற போது ஒயிட்ஃபீல்டு சாலையில் கண்ட காட்சி. நானும் வேறு வழியில்லாமல் ATM ல் பணத்தை எடுத்து செலவுகளை ஈடு கட்டினேன். மேலும் விசா, மாஸ்டர் கார்டு போன்ற டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் டிஜிட்டல் பேங்க் டிராங்ஷாக்சனை விட ஒரு நாளைக்கு 650 மில்லியன் பண பரிவர்த்தனைகளை வெறும் ஏழு நாடுகளில் செயல்படுத்தி UPI பரிவர்த்தனை முறியடித்து சாதனை படைத்தது. VISA கார்டின் மொத்த பரிவர்த்தனை 629 மில்லியன் மட்டுமே அதுவும் 175 நாடுகளில் நடக்கும் மொத்த பரிவர்த்தனைகள் இதில் ஒரு பியூட்டி என்னவென்றால்
இந்த விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் அமெரிக்காவை சேர்ந்தவை எனவே அவை மூலமாக நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு பயனாளர்களிடம் இருந்து இரண்டு சதவீதம் வரை பணத்தை வசூலித்து விடுவார்கள். ஆனால் நம் நாட்டின் UPI ல் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இதுதான் அமெரிக்க டீப் ஸ்டேட்டின் கண்களை உறுத்தியது எனவே தங்களுக்கு போட்டியாக அசுர வேகத்தில் வளரும் இந்தியாவின் UPI பரிவர்த்தனையை இதற்கு மேலும் வளர விட்டால் நமக்கு ஆபத்து என்று முடிவு செய்து அதை இங்குள்ள காங்கிரஸ் கட்சியின் மூலமாக சிதைத்து தோல்வியுற செய்ய வேண்டும் என பல வழிகளை கையாண்டு கொண்டிருக்கிறது. இதனால் நம் UPI திட்டத்தில் சேர இருந்த பல நாடுகள் இப்போது யோசனையில் ஆழ்ந்துள்ளன அந்த நாடுகள் இதை செயல்படுத்தி இருந்தால் நம் நாட்டுக்கு பல பில்லியன் டாலர்கள் வருமானம் கிடைத்து இருக்கும் ஆனால் அதை இங்குள்ள காங்கிரஸ்
மற்றும் ராகுல்காந்தி விரும்புவார்களா? இந்தியா முன்னேறி விட்டால் இவர்களின் கதி என்னாகும் அதனால்தான் நாம் கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்த UPI Payment திட்டத்தை எப்படியாவது தோல்வியுறச் செய்து அதை மற்ற நாடுகள் பயன்படுத்தவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள். நம் பாரத தேசம் எந்த விதத்திலும் முன்னேறி விடக் கூடாது என்பதில்
இந்த ராகுல்காந்தி
முழு முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். எனவே இந்த காங்கிரஸ் கட்சியின் நயவஞ்சக எண்ணத்தை
புரிந்து கொண்டு இந்திய மக்கள் அக்கட்சியை அறவே புறக்கணிக்க வேண்டும்.
பாஜக வின் புரிந்துணர்வுக் கூட்டணிக் கட்சியான திமுக கரூர் விவகாரத்தில் செய்வது அரசியலா, அவியலா பாஸ்?மேலும்
-
ரூ.4 கோடி கஞ்சா கடத்திய வாலிபர் கைது
-
தொழில் போட்டியில் அ.தி.மு.க., நிர்வாகி கொலை
-
'அம்ரித் பாரத்' பணி சரியில்லை கோட்ட மேலாளர் அதிருப்தி
-
தி.மலை கோவிலில் புரோக்கர்கள் ஆதிக்கம் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?
-
இலங்கைத்தமிழர் முகாம் முன்னாள் தலைவருக்கு வெட்டு
-
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ரூ.13 கோடியில் நடந்த பணிகள்