பதக்கத்தை தரலாம்; பரிசை தர முடியாது: டிரம்ப் -மச்சாடோ விவகாரத்தில் நோபல் கமிட்டி பதில்
நமது நிருபர்
நோபல் பரிசு வெற்றியாளரிடமிருந்து பிரிக்க முடியாதது. ஆனால் பதக்கத்தை வேறு எவருக்கும் கொடுக்கலாம் என விருது வழங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்து நோபல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பதக்கம் அல்லது பரிசுத் தொகையை என்ன செய்தாலும், பரிசைப் பெறுபவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவரே, நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியலில் தொடர்ந்து இருக்கிறார்.
ஒரு பரிசு பெற்றவர் என்ன செய்யலாம் என்பது குறித்து நோபல் அறக்கட்டளையின் சட்டங்களில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இதன் பொருள், பரிசு பெற்றவர் இந்தப் பொருட்களை வைத்திருக்க, கொடுக்க, விற்க அல்லது நன்கொடை அளிக்க சுதந்திரம் இருக்கிறது.
அமைதிக்கான நோபல் பரிசை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ, அறிவிக்கப்பட்டவுடன் மாற்றவோ அல்லது எந்த நிலையிலும் ரத்து செய்யவோ முடியாது. இந்த முடிவு இறுதியானது மற்றும் எல்லா காலத்திற்கும் பொருந்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் வேலையாக இந்த அம்மாவிற்கு கொடுத்த பரிசை cancel செய்ய வேண்டும்
மாப்பிள்ளை இவர்தான் ஆனா, இவரு போட்டிருக்க சட்டை என்னோடது..
இதை விட ஒரு கேவலமான தலைவரை பார்க்கவே முடியாது இந்த உலகில் லட்சக்கணக்கான வருடத்தில் இன்னொருவருக்கு கிடைத்த நோபல் பரிசை இவர் வாங்குவாராம் ஆகவே இவர் நோபல் பரிசு வாங்கியவர் ஆவாராம்????
எச்சில் பரிசு...
அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர்: வாஷிங்டன் வெனிசுலா எண்ணெயை ஒரு பீப்பாய் 45 டாலர் விலையில் விற்கும் என்றும் வெனிசுலா எண்ணெய் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கத்தாரில் அமெரிக்காவிற்குச் சொந்தமாக இருக்கும் வங்கிகளில் உள்ள கணக்குகளில் வரவு வைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். யார் அப்பன் வீட்டு காசு?
கேவலம் - நாளை யாராவது பாரீஸ் மியூசியத்தில் திருடப்பட்ட நகைகளை கொண்டு வந்து கொடுத்தால் கூட வாங்கி கொண்டு விடுவார் போல! இவரெல்லாம் ஒரு தலைவர்!
இந்த பரிசு மற்றும் தேர்வுக் குழு அனைத்தும் ஓரு அரசியல்.
வெனிசுலா ஆளும் கட்சி அதிபரை அமெரிக்கா கைது செய்ததை பாராட்டுவதற்காக எதிர்க் கட்சிக்காரர் ஆன இந்தம்மா தான் பெற்ற நோபல் பரிசையே சைகோ டிரம்ப்பிற்கு பரிசாக கொடுத்துள்ளார். அவனும் பேராசை பிடித்தவன். இந்தம்மா தியாக செம்மல் போல எல்லாம் ஒன்றும் தெரியவில்லை. அப்படி தியாகி என்றால் கஷ்டப் படும் எத்தனையோ பேரில் ஒருவரை தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கலாம். பாராட்டலாம். சைகோ விற்கு கொடுத்த இதைப் போய் பாராட்ட ஒன்றுமில்லை.
என்னமோ அந்த அம்மா அமைதிக்காக படுட்டது போல் நினைத்து திருக்குறளோடு ஒப்பீடுகிறார்கள்........ தயவு செய்து உண்மையை தெரிந்துகொள்ளுங்கள். அந்தம்மா நாட்டில் கலவரத்தைதான் உண்டாகினார் அது மட்டுமல்ல தங்கள் நாட்டின் எண்ணெய் வளத்தை அள்ளிக்கொண்டு போங்க என்று அமெரிக்காவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து காத்திருந்தார். அமெரிக்க நோபல் பரிசை காரணத்தோடுதான் கொடுத்தார்கள். அந்தம்மாவுக்கு இப்போ அதிபர் பதவி வேண்டும் அதுக்குதான் இப்படி ட்ராமா பண்ணுது. யூனுசை பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள் பரிசு பெறுபவர்கள் யார் யார் என்று
டிரம்ப் நோபல் பரிசை வாங்கிவிட்டார், இனி பாரத ரத்னாவையும் நம்மாளுங்க விலைபேசி வைப்பாங்க.மேலும்
-
பிரச்னையை சுட்டிக்காட்டுவதோடு தீர்வையும் சொல்கிறது 'தினமலர்'
-
இயற்கை வைரம் மட்டுமே இனி வைரம் பி.ஐ.எஸ்., தர நிர்ணய அமைப்பு உத்தரவு
-
தேசியம் : தலைவர்கள் பேட்டி
-
சத்தீஸ்கரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொலை
-
தெருநாய் துரத்தியதால் விபரீதம் சுவரில் மோதி வாகன ஓட்டி பலி
-
இந்துார் உயிரிழப்பு விவகாரத்தில் அரசியல் செய்கிறார் ராகுல்: டில்லியில் பா.ஜ., பாய்ச்சல்