ராம்குமார்-ஜீவன் அபாரம்: ஐ.டி.எப்., டென்னிசில் சாம்பியன்
சென்னை: ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார், ஜீவன் ஜோடி சாம்பியன் ஆனது.
சென்னையில், ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, சகநாட்டை சேர்ந்த பிரஜ்வால் தேவ், நிதின் குமார் சின்ஹா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 4-6 என இழந்த ராம்குமார், ஜீவன் ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் அசத்திய ராம்குமார், ஜீவன் ஜோடி 10-8 என தன்வசப்படுத்தியது.
ஒரு மணி நேரம், 29 நிமிடம் நீடித்த போட்டியில் ராம்குமார் ராமநாதன், ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 4-6, 6-3, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் தமிழகம்: கவர்னர் ரவி
-
கொரிய வீராங்கனை சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
-
எல்லைப்பாதுகாப்பில் முன்பைவிட இந்தியாவுக்கு கூடுதல் பலம்; ராஜ்நாத் சிங்
-
ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து விரைவில் தமிழகம் மீட்டெடுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்
-
டிரம்ப்புக்கு எதிர்ப்பு: அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தியது ஐரோப்பிய யூனியன்
-
ஏழைகளுக்கான திட்டங்களை தடுக்கும் அரசை தண்டிக்க வேண்டும்: பிரதமர் மோடி
Advertisement
Advertisement