டிரம்ப்புக்கு எதிர்ப்பு: அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தியது ஐரோப்பிய யூனியன்
வாஷிங்டன்: கிரீன்லாந்தை கையகபடுத்துவது தொடர்பாக அதிபர் டிரம்ப் மிரட்டி வரும் நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தி வைத்துள்ளது.
ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ளது, உலகின் மிகப் பெரிய தீவு நாடான கிரீன்லாந்து. ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஒரு பகுதியாக இது இருந்தாலும், தன்னாட்சி அதிகாரம் பெற்றது. அதிக நிலப்பரப்பும் கனிம வளமும் கொண்ட கிரீன்லாந்தை, கையகப்படுத்த திட்டமிட்டு, அச்சுறுத்தும் தொனியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி வருகிறார்.
ஆர்டிக் பகுதியில், ரஷ்யா, சீனா ஆகியவற்றின் ஆதிக்கத்தை தடுக்க, கிரீன்லாந்து தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது அவரது வாதம். எப்படியாவது, அந்த நாட்டை தங்கள் வசம் கொண்டு வந்தே தீருவோம் என்றும் அவர் கூறி வருகிறார்.
இதற்கு, அமெரிக்காவின் நேட்டோ கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகள் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. கிரீன்லாந்தில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஐரோப்பிய நாடுகள், தங்கள் படைகளையும் அனுப்பி வைத்துள்ளன. இது, டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
கிரீன்லாந்து விவகாரத்தில், அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், தாங்கள் படைகளை அனுப்பியது, கிரீன்லாந்தின் பாதுகாப்பை பலப்படுத்தவே என்றும், அமெரிக்காவிற்கு எதிராக அனுப்பவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்கா உடன் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பது என ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வென் டெர் லேயன் இடையே இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
டிரம்ப் மிரட்டல் விடுப்பதால், இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு இருந்தாலும், இனிமேல் அடுத்த கட்ட நடவடிக்கை ஏதும் இருக்காது என ஐரோப்பிய மக்கள் கட்சித் தலைவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் முடிவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஐரோப்பிய யூனியன் தலைவரும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட நாடுதான் அந்த நாடு பெரிய சந்தை எல்லாம் இல்லை அவனோட தயாரிப்பைதான் உலக நாடுகளில் விற்கவேண்டும் தனக்குத்தானே நெருப்பு வைத்துக் கொள்கிறார் பெட்ரேல்பம்ப் அதிபர்
சொந்த காசில் தனக்கே சூன்யம் வைத்து கொள்கிறார் ஜோக்கர் டிரம்ப்
நாம் அத்திப்பட்டி கதையினை சினிமாவில் பார்த்திருப்போம். அமெரிக்கா கிரீன்லாந்தினை அத்திப்பட்டி போல் மாற்றிவிடுவதை நிஜத்தில் பார்க்கப்போகின்றோம்.
சூப்பர் ஆனால் நவீன அமெரிக்கத் துக்ளக் திருந்த மாட்டார்
இது வரை டிரம்ப் விரோதிகளை சம்பாதித்தது.
இந்தியா, சீன, ரஷ்யா, ஐரோப், உக்ரைன், ஈரான்,கொலம்பியா, கனடா, வெனிசுவேலா, மெக்ஸிகோ, ஐநா சபை மற்றும் அமெரிக்க மக்கள்.
அமெரிக்காவை மற்ற உலக நாடுகள் கட்டோடு வெறுக்க இவர் தன்னால் முடிந்தவரை முயற்சிக்கிறார்.
டிரம்ப் தன்னுடைய ஓட்டைவாய் கருத்துக்களால் தனக்குத்தானே எதிரிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். கூடிய சீக்கிரம் தனக்குத்தானே ஆப்பு அடித்துக்கொள்வார்.
ஆட்ட கடிச்சு மாட்டக்கடிச்சு மனுசனைக் கடிக்கறாம் பாருங்க!
டிரம்ப் வரிவிதிப்பு பூச்சாண்டிக்கு எந்த நாடும் அஞ்சாது. உலகில் உழைக்காமல் கிடைக்கும் இயற்கை வளம் பாதியை பொது உடமை ஆக்க வேண்டும். பாக். போன்ற ஆக்கிரமிப்பு நாடுகள் தவிர இந்தியா, நேபாளம் போன்ற பூர்வீக மக்கள் வாழும் நாட்டிற்கு பிரித்து கொடுக்க வேண்டும். மனிதன் உழைத்து வாழ்ந்தால் போர் புரியும் எண்ணம் வராது. ஆண், பெண் எந்த தொழிலும் தெரியாமல் வாழ முடியாது. கொள்ளையடித்து, ஏமாற்றி பல நாட்டு மக்கள் வாழ்வது வரலாறு மூலம் தெரிகிறது. யூனியன் ஒப்பந்தம் ரத்து செய்ய வேண்டும். அமெரிக்கா மக்கள் உழைப்பு மூலம் ஏராளமான செல்வம் தேடலாம். அதிக வட்டி, வரி பாவசெயல். நிலைக்காது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நேட்டோ நாடுகளின் இந்த வர்த்தக ஒப்பந்த குடுமிப்பிடி குழாயடி சண்டையை தன்னுடைய நாட்டில் இருந்து கொண்டே பார்த்து ரசிப்பவர் யாரென்றால் அது ரஷ்ய அதிபரான நம்ம விளாடிமிர் புடின்தான். ஏனென்றால் இதுநாள்வரை அவரை ஒரு கொடுங்கோலன் என்றும். அவரை கைது பண்ண வேண்டும் என்றும் கூறி ரஷ்யாவிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் இப்போது ரஷ்யாவை ஐஸ் வைக்க ஆரம்பித்து இருக்கின்றன. என்ன இருந்தாலும் ரஷ்யாவும் ஒரு ஐரோப்பிய நாடுதான் என்று சமீபத்தில் ஜெர்மன் பிரதமர் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார். இதனால் நேட்டோ நாடுகளின் Article 5 என்கிற ஒப்பந்த ஒற்றுமை உடைய ஆரம்பித்து விட்டதைதான் ராஜ தந்திரியான புடின் உணர்ந்து மௌனப் புன்னகை புரிகிறார். மேலும் அவர் அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்றுவதை வெளிப்படையாக எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டாலும் மறைமுகமாக ஆதரிக்கிறார். அமெரிக்காவை தவிர்த்து மற்ற NATO (North Atlantic Treaty Organization) நாடுகளான ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகள் மட்டுமே சேர்ந்து ரஷ்யாவை எதிர்க்க முடியாது. இதுவரை அமெரிக்காவை அண்டியிருந்து அமைதியாகவும், நிம்மதியாகவும் தங்கள் வாழ்வை கழித்த ஐரோப்பிய ஒன்றியம் இப்போது தங்கள் எதிர்காலத்தை தொலைத்து விட்டோமே என பீதியில் உறைந்து போயுள்ளன என்பதுதான் நிதர்சனம். கடைசியாக இவர்களின் இந்த அடிதடியால் அநாதையாக கழட்டிவிடப் பட்டவர் யாரென்று தெரியுமா? சாட்சாத் உக்ரைன் கோமாளி ஜெலன்கிதான்!
ஆனாலும் jelensky இதை புரிந்து கொண்டவர் போல் தெரியவேயில்லை. ஐரோப்பிய நாடுகள் மிகவும் முன்னேறியவை என்றாலும் அவை நமது மாநிலங்களின் அளவை விட மிகவும் சிறியவை. அதன் மக்கள் தொகை மிகவும் சொற்பம். அவை பெரும்பாலும் நிலத்தால் சூழப்பட்டவை. சிறிய நாடுகள் என்பதால் அதன் ராணுவ பலமும் சொற்பம். அதன் மக்கள் அமைதியானவர்கள். மேலும் சுகபோக வாழ்க்கையில் வாழ்ந்தவர்கள். பிரான்ஸ் பிரிட்டன் தவிர்த்து மற்ற நாட்டு வீரர்கள் சண்டைக்கு லாயக்கற்றவர்கள். ஆனால் இனம் என்ற கொள்கையில் தாங்கள் எல்லாம் ஒன்று என்ற சிந்தனை உள்ளவர்கள். அவர்களின் பலகீனம் தான் அமெரிக்காவிடம் அவர்களை ஒண்ட வைத்தது. அமெரிக்கா, திராவிட தலைவர்கள் இல்லாத பூச்சாண்டியினை இருப்பது போல் காட்டுவது மாதிரி ரஷ்யா சீனான்னு பூச்சாண்டி காட்டி அவர்களை தம் பக்கம் வைத்திருந்தது.மேலும்
-
தனியொருவனாக போராடிய கோலி; இந்திய மண்ணில் முதல்முறையாக தொடரை வென்றது நியூசிலாந்து
-
ஊடகங்களை ஒடுக்கும் ஆம் ஆத்மி அரசு; பஞ்சாப் கவர்னரிடம் பா.ஜ., புகார்
-
ஹாக்கி இந்தியா லீக்: பெங்கால் அணி வெற்றி
-
மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் அபாரம்
-
ஷ்ரேயங்கா தேர்வு: இந்திய அணி அறிவிப்பு
-
பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் யுஏஇ அதிபர்