வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் தமிழகம்: கவர்னர் ரவி
சென்னை: '' தமிழகம் வளர்ச்சியை எட்டாமல் பின்தங்கிய நிலையில் உள்ளது,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த 'பாரதத்துக்கான தொழில்நுட்பம் 2026' மாநாட்டில் கவர்னர் ரவி பேசியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் 2 லட்சம் பொறியாளர்கள் உருவாகின்றனர். உயர்கல்வியில் ஏராளமானோர் சேர்வதுடன், அதிகமான காப்புரிமை தமிழகத்தில் இருந்து பதிவு செய்யப்படுகிறது. இதனால், தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளின் தலைநகராக உருவெடுப்பதற்கான ஆற்றல் தமிழகத்துக்கு உண்டு. இவ்வளவு புள்ளி விவரங்கள் இருந்தும், அது முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்த தவறி விட்டது.
தொழில்நிறுவனங்கள் வெளிப்படையான மற்றும் மறைமுகமான செலவுகள் காரணமாக மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. தொழில்முனைவோர் தங்களது திட்டங்கள், யோசனைகளை தமிழகத்தில் உருவாக்கினாலும் அவற்றை விரிவுபடுத்துவதற்கு மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றனர். மாநிலத்தில் உள்ள மற்ற நிறுவனங்களும், இங்கேயே விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டாத நிலை காணப்படுகிறது. இதனால், மாநிலம் வளர்ச்சியை எட்டாமல் பின்தங்கிய நிலையில் உள்ளது.
அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வித்தரத்தில் வேறுபாடு உள்ளது. இதனை களைய மாநில அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.
குறை சொன்னால் திராவிடத்துக்கு கோபம் வரும் .....
மாண்புமிகு ஆளுனர் கூறுவது முற்றிலும் சரியே. கல்லூரிகள் காப்புரிமைகள் பல பெற்றிருந்த போதிலும் வியாபரரீதியியாக செயல்படத்தக்க காப்புரிமைகள் மிக மிகக் குறைவு. முனைவர் பட்டம் பெற மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியும் முழுமையானதாகவும் தரத்துடனும் இல்லை. 25 ஆண்டுகளுக்கு முன்னர் முனைவர் பட்டத்துக்கு தேவைப்பட்ட ஆராய்ச்சியில் சுமார் 15% ஆராய்ச்சி அளவிற்கே முனைவர் பட்டம் தற்பொழுது வழங்கப்படுகிறது. பல கல்லுரிகளில் ஆராய்ச்சி செய்வதற்கு அடிப்படை வசதிகள் இல்லை மற்றும் நூலகங்களும் முழுமையாக இல்லை. சில பி ஹச் டி கைடுகள் டியூஷன் எடுப்பது போல் வியாபாரநோக்கில் செயல் படுகிறார்கள். மத்திய அரசால் ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியினை அந்த நிறுவனத்தின் அலுவலர்கள் தணிக்கையாளார்களின் குறைகளுக்குப் பயந்து மத்திய அரசு நடத்தும் கல்லுரிகளுக்கே வழஙகுகின்றனர். இதனால் மத்திய அரசு தொழிற்சாலைகளில் ஆராய்ச்சியினை ஊக்குவிக்க திட்டங்கள் வகுத்தும் கூட தனியார் கல்லுரிகளிலோ தொழிறிற்சாலைகளிலோ ஆராய்ச்சி செய்யமுடியவில்லை. தொழில் துவங்க முனைவோருக்கு அதனை சார்ந்த துறையினில் பணிபுரியும் கலஅலுவலர்கள் மற்றும் அலுவலர்களால் தரப்படும் தொல்லைகளும் தடைகளும் கட்டுப்பாடுகளும் ஏராளம். இதனை எல்லாம் சீர் செய்தல் வளர்ச்சியைக் காணலாம்.
மைக்கேல்பட்டி பள்ளியில் ஏற்பட்ட பிரச்னையை தீர்த்து வைக்க வில்லையா கள்ளக்குறிச்சியில் பள்ளியில் இறந்த மாணவி விவகாரம் சுமூகமாக தீர்த்து வைக்கப்படவில்லையா அமைச்சர் பொன்முடி சமுதாய நக்கல் செய்த பேச்சிற்கு முடிவு கானவில்லையா இன்னொரு அமைச்சர் சென்ற ஆட்சியில் வேலை வாங்கித்தருவதாக சொல்லி வாங்கிய கணக்கிலண்டராத பணத்திற்கு வழி வகுக்க வில்லையா இன்னும் இவைகள் போன்று கணக்கிலடங்காதவைகள் ஏராளம் ஏராளம் வழக்குகள் சுமுகமாக முடித்து வைக்கப்பட்ட நல்ல ஆட்சி இவைகளை யாருமே மறக்க முடியாது
உத்தர பிரதேசம் மத்திய பிரதேசம் பீகாரை விட தமிழ் நாடு பின் தங்கியுள்ளதா என்று கவர்னரை பார்த்து கேள்வி .....இந்த மாநிலங்களை ஐம்பது வருஷம் காங்கிரஸ் ஆண்டபோது அங்கெல்லாம் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடியதா?? ...இப்ப அங்கே பாலும் தேனும் நின்னு போச்சா ??....அப்பறம் எதுக்கு விடியல் டெல்லிக்காரன் இத்தாலிக்காரனுடன் விடியல் எதற்கு மத சார்பின்மையாக தேர்தல் கூட்டணி வைக்கனும் ??....கூட்டணியை விட்டு வெளியேறு ...
இவ்வளவு பின் தங்கிய மாநிலத்தில் ஏன் பணி புரிகிறீர்களென்று யாராவது கேட்டால்?
பழமொழி
ஒவ்வொரு முறையும் பொய் சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தோம் ... அதனால் பொய் பேசியே காலத்த கடத்தி விட்டோம் என்று பெருமை படுகிறார்கள் திராவிட மாடல் ஆட்சியாளர்கள்.
பொய் அறிக்கை மூலமாக ஆட்சி நடத்தும் திராவிட மாடல் முதல்வர்.
மத்திய அரசு வழங்கும் மாநிலங்கள் வளர்ச்சி பற்றிய புள்ளி விவரங்களை படித்து பாருங்கள் புரியும்
முருகா...அவர் சொல்வது தமிழ்நாட்டில் நடக்கும் டாஸ்மாக் மற்றும் போதை பொருள் வளர்ச்சியை பற்றி...
தவறு. திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், போதைப்பொருள் கடத்தல், பாலியல் வன்முறைகள், கொலை, கொள்ளை, ஊழல் இவற்றில் இந்தியாவிலேயே தமிழகம் முன்தங்கிய நிலையில் உள்ளது.மேலும்
-
தனியொருவனாக போராடிய கோலி; இந்திய மண்ணில் முதல்முறையாக தொடரை வென்றது நியூசிலாந்து
-
ஊடகங்களை ஒடுக்கும் ஆம் ஆத்மி அரசு; பஞ்சாப் கவர்னரிடம் பா.ஜ., புகார்
-
ஹாக்கி இந்தியா லீக்: பெங்கால் அணி வெற்றி
-
மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் அபாரம்
-
ஷ்ரேயங்கா தேர்வு: இந்திய அணி அறிவிப்பு
-
பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் யுஏஇ அதிபர்