கொரிய வீராங்கனை சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்

புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் ஒற்றையரில் தென் கொரிய வீராங்கனை ஆன் சே யங் சாம்பியன் பட்டம் வென்றார்.

டில்லியில், 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், 'நடப்பு சாம்பியன்' தென் கொரியாவின் ஆன் சே யங், சீனாவின் வாங் ஜி யி மோதினர். மொத்தம் 43 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஆன் சே யங் 21-13, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 3வது முறையாக (2023, 2025, 2026) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சீனதைபேயின் லின் சுன்-யி, இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டி மோதினர். மொத்தம் 38 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய லின் சுன்-யி 21-10, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் ஆனார்.

Advertisement