அமெரிக்க மஞ்சள் பட்டாணி வரி இந்தியா குறைக்க வலியுறுத்தல்

வாஷிங்டன் : அமெரிக்காவின் மஞ்சள் பட்டாணி மீதான இந்தியாவின் இறக்குமதி வரியை குறைக்க, பேச்சு நடத்துமாறு அதிபர் டிரம்பை அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கெவின் கிராமர், ஸ்டீவ் டெய்னிஸ் ஆகியோர் டிரம்புக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மற்றும் மோன்டானா பகுதிகள், பருப்பு உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. குறிப்பாக, இங்கே உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் பட்டாணியை இந்தியா அதிக அளவில் பயன்படுத்துகிறது. ஆனால், மஞ்சள் பட்டாணி இறக்குமதிக்கு 30 சதவீத வரி விதித்துள்ளது.

இதனால், அமெரிக்க விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுடன் பேசி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement