புதிய நீர்த்தேக்கத்திற்கு முதல்வர் நாளை அடிக்கல்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே புதிதாக அமைக்கப்பட உள்ள நீர்த்்தேக்கத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை மாநகரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, சென்னை அருகில் உள்ள ஏரிகளில் இருந்தும், கடலுார் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும், பெருமளவு குடிநீர் பெறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கடல்நீரில் இருந்தும் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.
இருப்பினும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதையடுத்து, மாமல்லபுரம் அருகில் நெம்மேலியில் 471 கோடி ரூபாய் மதிப்பில், புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக, பகிங்ஹாம் கால்வாய் பகுதியில், 5,161 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 11:00 மணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
-
சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்
-
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பிப்., 3 முதல் வேலைநிறுத்தம் 'ஆக்டோ ஜியோ' அறிவிப்பு
-
ஏழைகளின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம்
-
கல்வி நிறுவனங்களில் சமத்துவ குழு ஜாதியை வளர்க்கும் யு.ஜி.சி., உத்தரவு
-
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்: அல்கொய்தா முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக அறிவிப்பு
Advertisement
Advertisement