மணிமுக்தாற்றில் ஆற்று திருவிழா

விருத்தாசலம்: காணும் பொங்கலை முன்னிட்டு, வி ருத்தாசலம் மணிமுக்தாற்றில் ஆண்டு தோறும் ஆற்று திருவிழா நடக்கும்.

இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆடி, பாடி மகிழ்வர்.

இந்நிலையில், நேற்று காணும் பொங்கலையொட்டி, விருத்தாசலம் மணி முக்தாற்றில் நடந்த ஆற்று திருவிழாவில், விருத்தாசலம் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள பெரியர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் கூடி ஆற்று மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.

மேலும், சிறுவர்கள் விளையாடி மகிழ ராட்டினம், ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந் தன. அதில், சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க விருத்தாசலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement