டில்லி புறப்பட்டார் விஜய்; சிபிஐ முன்பு நாளை 2வது முறையாக ஆஜராகிறார்
சென்னை; கரூர் துயரம் தொடர்பாக 2ம் கட்ட சிபிஐ விசாரணை நாளை நடக்க உள்ளது. இந்த விசாரணைக்காக தவெக தலைவரும், நடிகருமான விஜய் இன்று சென்னையில் இருந்து டில்லி புறப்பட்டார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொது செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டனர். சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர்.
விஜய் பயணித்த பிரசார பஸ்சையும், கரூர் விசாரணை அலுவலகத்திற்கு கொண்டு வந்த அதிகாரிகள், அதன் உள்ளேயும், வெளியேயும் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்யை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது.
அதை ஏற்று தொடர்ந்து ஜன.12ம் தேதி விஜய் டில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் பலமணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் தரப்பு திட்டமிட்டு இருந்த தருணத்தில் பொங்கல் விடுமுறையை காரணம் காட்டி, அடுத்த நாட்களில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விஜய் விலக்கு கேட்டு இருந்தார்.
இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் ஜன.19ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூற, டில்லியில் இருந்து விஜய் சென்னை திரும்பினார். தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து விட்ட படியால், சிபிஐயின் 2ம் கட்ட விசாரணைக்காக அவர் இன்று (ஜனவரி 18) மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார்.
அங்குள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கும் விஜய், நாளைய தினம் சிபிஐ விசாரணையை எதிர்கொள்கிறார். நாளைய முழு விசாரணைக்கு பின்னரே, அவரிடம் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படுமா? என்பது தெரிய வரும்.
விஜய் அவர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டிய இடத்தில் இருந்து தவறினால் கேள்வி கேட்கலாம் திரு. ...அவர்களே இங்கே பலர் தி.மு.க வை தூக்கி சுமப்பவர்கள்- எப்படி தினமலரில் உள்ளார்கள் என்று தெரியவில்லை... ஒற்றர்களே- எங்களை கேள்வி கேட்கலாம்- அதிகாரம் வந்த பின்னர்-
காலையில் எழுந்ததும் நாளிதழ் பார்த்தால் கொலை-கொள்ளை-கூட்டு பாலியல்- பல தரப்பட்ட மக்கள் போராட்டம்- நீதி மன்ற அவமதிப்பு - லஞ்சம் வாங்கிய பணியாளர் ஏதேனும் ஒரு செய்தி இல்லாமல் உள்ளதா-
உயர் கல்வி வாய்ப்பு தமிழகத்தில் அதிகம்தான்- ஆனால் வேலைவாய்ப்பு?
வாக்குறுதியில் கூறியவை- யாரும் கவனிக்காத வை:
முதல் தலைமுறை பட்டதாரிக்கு அரசு பணி முன்னுரிமை-
30000 பேருக்கு வனங்கள் காக்க 12 வகுப்பு முடித்தோருக்கு வேலை-
சிங்கப்பூரில் பிளேன் டிக்கெட் ரூ.5.
ஒரு முறை டெல்லி போய்வர 40 லட்சம் செலவு செய்யும் அரசியல்கட்சி தலைவரை இதுவரை தமிழகம் கண்டதில்லை. இவரை நம்பி ஆட்சியை கொடுத்தால் எவ்வளவு மக்கள் வரிப் பணம் விரயம் ஆகும்? திமுகவையும் மிஞ்சுவார்
பொங்கல் கொண்டாடாதவர் எதற்காக பாதியில் சென்னை வந்தார்?
அவர் தனி விமானத்தில் போவது இங்கே எத்தனை பேருக்குத்தான் வயித்தெரிச்சல்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...
இருட்டுனில் நீதி மறையட்டுமே...
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே...
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நி விளையாடு
நல்லதை நினைத்தே நி போராடு
நல்லதை நினைத்தே போராடு...
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதி பாதி
கழகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதெ மதிமயங்காதே
கலங்காதெ, மதிமயங்காதே...
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
ஏழு நணி நேரமா கேக்காத கேள்விகளை இனிமேத்தான் கேக்கப் போறாங்களாக்கும்? உதாரணமா அன்னிக்கி காலை எத்தனை இட்லி சாப்புட்டீங்கன்னு கேப்பாங்க. இவுரு நாலும்பார். இன்னொரு கட்ட்சி ஆளிடம் இதே கேள்வியைக் கேட்டிருப்பாங்க. அவுரு விஜய் மூணு இட்லிதான் சாப்புட்டாருன்னு சொல்லுட்டா, திருப்பி கூப்புட்டு முன்னுக்கு பின் முரணான தகவல் தர்ராருன்னு சொல்ல வாய்ப்பு.
என்னைய மாதிரி ஆட்களுக்கு சி.பி.ஐங்குற பேரைக் கேட்டாலே சின்ன வயசுல இருந்து ஒரு குலை நடுக்கம். ஆனா நிஜத்தில வேற மாதிரி ரொம்ப ஹாயாக தனியார் விமானத்தில் பறந்து சென்று பதில் சொல்லும் அளவுக்குத்தான் சி.பி.ஐ விசாரணை இருக்கும் போல!
நடப்பது பார்த்தல் விஜய்யை வளைக்க நடக்கும் பேச்சுவார்த்தை மாதிரி உள்ளது
கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கே தனி விமானத்தில் பறந்தவர் எத்தனை முறை கூப்பிட்டாலும் தனக்காக பறக்க மாட்டாரா என்ன? இவர் கட்சி ஆரம்பித்தது சாதாரண பொதுமக்களுக்கு லாபமோ இல்லையோ? தனியார் விமான கம்பெனிகளுக்கு கொள்ளை லாபம்!
விளங்கிடும் தற்குறி அணில்ஸ் வெத்து வேட்டு கட்சி.....மேலும்
-
புதிய அம்ரித் ரயில்: பிரதமருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி
-
தேர்தல் அறிக்கை தயாரிக்க பாஜவில் குழு
-
வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் தமிழகம்: கவர்னர் ரவி
-
கொரிய வீராங்கனை சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
-
எல்லைப்பாதுகாப்பில் முன்பைவிட இந்தியாவுக்கு கூடுதல் பலம்; ராஜ்நாத் சிங்
-
ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து விரைவில் தமிழகம் மீட்டெடுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்