உ.பி., மகர மேளா: 3.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், மகர மேளா நடந்து வரும் சூழலில், தை அ மாவாசையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில், 3.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், மகர மேளா நடந்து வருகிறது. தை அமாவாசையான நேற்று, முக்கிய நிகழ்வான புனித நீராடல் விழா வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி, நாடு முழுதும் இருந்து அதிகாலை முதலே திரளான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்தனர்.
மதியம் 12:00 மணிவரை, நேற்று ஒரே நாளில் 3.5 கோடி பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களை வழிபட்டு, தர்ப்பணம் கொடுத்தனர். மகர மேளாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக, 1970 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக குடில்கள், 25,000 கழிப்பறைகள் நிறுவப்பட்டன.
மேலும், பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்த, 10,000 போலீசார் குவிக்கப்பட்டனர். இது தவிர, நதிக்கரைகளில் பக்தர்கள் சிரமமின்றி புனித நீராட, 12,100 அடி துாரத்திற்கு படித்துறையும் அமைக்கப்பட்டன.
இதற்கிடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தலின்படி, பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் துாவப்பட்டன. முன்னதாக மகரசங்கராந்தி தினத்தன்று, 1.03 கோடி பக்தர்கள் மகர மேளாவில் பங்கேற்று புனித நீராடினர்.
இது போல புல்லுருவிகளை கண்காணித்துக்கொண்டு இருந்தால் சிக்கல் வராது. விசைக்கு மாநில அரசு இது போல பாதுகாப்பு கொடுத்திருந்தால் 40க்கு மேற்பட்ட உயிர்களை பாதுகாத்திருக்கலாம்.மேலும்
-
அரசு மருத்துவமனை ஊழியர் மயங்கி விழுந்து சாவு
-
சொட்டு நீர் பாசனம் செய்முறை விளக்கம்
-
அக்கா கொலை: தம்பி கைது
-
புலிகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் சுற்றுலா பயணிகளுக்கு 6 நாள் தடை
-
துாண்டில் வளைவு அமைக்க கோரி கிராமத்தினர் தொடர் போராட்டம்
-
கும்மி, தெம்மாங்கு பாடி கொண்டாடப்பட்ட சங்க இலக்கிய 'சிறுவீட்டுப் பொங்கல்' பூ எருவாட்டித் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்த மக்கள்